மோடியின் குஜராத்தில் தீண்டாமை அவலங்கள்:
நரேந்திர மோடி எழுதிய நூல் ஒன்று 2007 ஆம் ஆண்டு வெளி வந்தது. அதன் பெயர் கர்மயோகம்.
அவர் எழுதிய நூல் என்பதைவிட அவருடைய உரைகளின் தொகுப்பு.
அதில் தலித் மக்களைப் பற்றி குறிப்பிடும்போது அவர்கள் மலம் அள்ளுதல் போன்ற பணிகளை செய்வதற்குக் காரணம், அவர்கள் அந்தப் பணிகளைப் புனிதமாகக் கருதுகின்றார்கள். “நுஒயீநசநைnஉந in ளுயீசைவைரயடவைல” ஆன்மிக அனுபவம் எனக் கூறுகின்றார். இதனால் தான் அவர்கள் மலம் அள்ளுதல் முதலாய தொழில் களை இத்தனை காலமாக செய்கின்றார்கள். அல்லாமல் அவர்கள் தங்களுக்கு வேறு தொழில்கள் கிடைக்கவில்லை என்பதனால் அல்ல என்கின்றார்.
அவர் அந்த நூலில் எழுதுகிறார்:
“I do not believe that they are doing this job just to sustain their livelyhood had this been so, they would not have continued with this type of job, generation after generation... at some point of time somebody might have got the englightenment, that it is their duty to work for the happiness of the entire society and god so. That they have to do this job, bestowed upon them by godso, and that his job of cleaning shared continue as an spiritual activity for centuries. This shered have continued generation after generation. It is impossible to believe that their ancestors did not have the choice of adopting any other work or business.”
இதன் பொருள்:
“நான் அவர்கள் (தலித்கள்) இந்தப் பணியை தங்கள் வயிறுகளை நிரப்புவதற்காகத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் என நம்பவில்லை. இதற்காகத்தான் அவர்கள் செய்கின்றார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் இந்த (அசிங்கமான தொழிலை) இத்தனை தலைமுறையாகச் செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் இந்த மக்களில் யாருக்கோ, இந்தப் பணியைச் செய்வது மொத்த மனித இனத்திற்கும் செய்திட வேண்டிய பணி என்ற ஞானோதயம் ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் கடவுள் அவர்கள் மீது பணித்த இந்த கடமையை அவர்கள் செய்து கொண்டிருக் கின்றார்கள். அவர்கள் மீது கடவுள் அருள் செய்த இந்தக் கடமையைத்தான் அவர்கள் செய்ய வேண்டும். இந்த துப்புரவு பணி, ஓர் உள்ளார்ந்த ஆன்மிக நடவடிக்கையாக, பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆன்மிகப் பணிதான், தலைமுறை தலைமுறையாக நடந்து கொண்டிருக்கின்றது. இஃதல்லாமல் இந்த துப்புரவு பணிகளைச் செய்பவர்களின் தலைமுறைகளுக்கு வேறு வேலைகளோ, வாணிபங்களோ கிடைக்க வில்லை என நம்ப முடியவில்லை.”
இதிலிருந்து பெறப்படும் உண்மை மனித மலம் அள்ளுவது பிணம் தூக்குவது முதலாயப் பணிகள் ஆன்மிக தேட்டமும், நாட்டமுமாம். அதனால் அவர்கள் அந்தப் பணியைச் செய்திட வேண்டுமாம்.
இந்த நூல் வேறொரு விதத்தில் ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டும். அது, இந்த நூல், மோடி பேசிய அல்லது நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு. இந்த உரைகள் அவர் முதலமைச்சர் என்ற தோரணை யில், ‘ஐ.ஏ.எஸ்.’ என்ற மாவட்ட ஆட்சியர் அந்தஸ்தி லுள்ள அதிகாரிகளிடம் நிகழ்த்தியது. அப்படி யானால் தான் மட்டும் தலித் பெருங்குடி மக்களைப் பற்றி இப்படி தரக் குறைவான ஒரு பார்வையைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அதனை அதிகாரிகள் வட்டத்திலும் பதிய வைத்திருக்கின்றார்.
மோடி இப்படியொரு கருத்தை தனது உயர்மட்ட அதிகாரிகளின் மனதில் பதிய வைத்திருக்கின்றார். திமிரோடு அதை நூலாகவும் வெளியிட்டிருக்கின்றார் என்ற செய்திகள் பரவலாயின. அதனை நவம்பர் 2007இல் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடும் வெளியிட்டது. இதனை தலித் மக்கள் - குறிப்பாக தமிழக தலித் மக்கள் எதிர்த்தார்கள்.
உடனேயே மோடிக்கு ஆதரவாக சங்கப் பரிவாரம் களத்தில் குதித்தது. ஆனால், நாடெங்குமுள்ள தலித் மக்கள் கொதித்தார்கள். மனித உரிமை ஆர்வலர் சுகாஷ் கட்டேடர், இந்த நூலை தடை செய்ய வேண்டும் மோடியைக் கைது செய்து வன்கொடுமைச் சட்டததின்படி சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும் என்று அகில இந்திய அளவில் குரல் எழுப்பினார்.
இந்தப் பின்னணியில் இந்த நூல் திரும்பப் பெறப் பட்டது. நூல் ஒரு வேளை திரும்பப் பெறப்பட் டிருக்கலாம். ஆனால், அன்று மாவட்ட ஆட்சியர் அளவிலுள்ள அதிகாரிகளின் மனதில் மோடி பதிய வைத்த சிந்தனைப் போக்கை யார் திரும்பப் பெறுவது?
மோடியை ஒரு பெரிய ஹீரோவாகக் காட்டிடும் பொறுப்பு ஆப்கோ - என்ற சர்வதேச நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மோடியின் உரைகளை நூலாகத் தொகுத்து வெளியிட வேண்டும். மோடியை ஒரு சீரிய சிந்தனை யாளனாகக் காட்டிட வேண்டும் என்ற பொறுப்பும் ஆப்கோ நிறுவனத்திடமே ஒப்படைக்கப்பட் டிருந்தது. அந்த நிறுவனம் பல கோடி பணத்தைப் பெற்றுக் கொண்டுதான் இந்தக் கீழ்த்தரமான நூல் வெளியிட்டுப் பணியைச் செய்தது.
இந்த மொத்த குழப்பத்திலும் பெறப்படும் உண்மை என்னவெனில், மோடி தலித் மக்களை அவர்களின் அந்த கீழான தொழிலிலும், நிலையிலுமே வைத்திருப்பார். இன்று குஜராத்தில் நடந்து கொண்டிருப்பவை இதனை உறுதி செய்கின்றன. குஜராத்தில் டீக்கடை உட்பட அனைத்துப் பொதுத் தளங்களிலும் தலித்களுக்குத் தனி பாத்திரமாம். அதற்குப் பெயர் இராம பாத்திரமாம். சுயஅ யீயடயை என்று புனிதப்படுத்திக் கூறப்படுகின்றது.
குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை ‘வால்மீகி’ என அழைக்கின்றார்கள். இவர்கள் எப்படி நடத்தப் படுகின்றார்கள் என்பதை அங்குள்ள வால்மீகிகளில் ஒருவர் இப்படிக் கூறுகின்றார். “நாங்கள் தீண்டத் தகா தவர்கள். எங்களை இங்கே யாரும் தொடுவதில்லை.”
பிக்கா பாய் என்ற இந்த தலித், ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கின்றார். அந்தப் பண்ணையில் அவருக்கென ஒரு தேனீர் குவளை வைக்கப்பட்டிருக்கும். அவருக்கான தேனீர் அந்த குவளையில் ஊற்றப்படும். தேனீரை குவளையில் ஊற்றுபவர் அந்த குவளையைத் தொடுவதுமில்லை. அதேபோல் உணவு வாங்கிடவும் தனி பாத்திரம். அந்தப் பாத்திரத்தையும் தொட்டு அல்லது கையில் வாங்கி யாரும் உணவை தருவதில்லை. மாறாக சற்று தூரத்திலிருந்து உணவை வழங்குவார்கள்.
இப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் தனி பாத்திரத்திற்கு குஜராத்தில் ‘இராம் பாத்திரம்’ என்று பெயர். அங்காடிகளில் அவர்கள் காய்கறிகளைத் தொட்டுப் பார்த்து வாங்கிட முடியாது. எட்டத்தில் நின்று சமிக்ஞைகள் செய்திட வேண்டும். தருவதை வாங்கிக் கொண்டு காசை அங்குள்ள கூடையில் போட்டுவிட்டுப் போய்விட வேண்டும்.
இதுதான் பல தலைமுறைகளாக நடந்து கொண்டிருக்கின்றது. அன்றைய நாள்களில் அந்த இராம பாத்திரம், களிமண் குவளையாக இருந்தது. இன்யை நாட்களில் அது ஸ்டீல் சொம்புகளாக மாறி இருக்கின்றன. பல தேனீர் கடைகளில் இப்போது டீயை குடித்து விட்டு தூக்கி வீசிடும அளவிலுள்ள பிளாஸ்டிக் குவளைகளிலேயே டீ வழங்கப்படு கின்றது. தலித் மக்கள் பரவிக் கிடக்கும் 22 மாவட்டங் களிலும் இந்தத் தனிக் குவளை முறை பின்பற்றப்படுகின்றது.
தாழ்த்தப்பட்டவர ்கள் – மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்ட காலத்தில் – ஊமைகளாக இருந்த அவர்களுக்கு பாடுபட்ட தலைவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான். ஈ.வே.ராமசாமி நாயக்கர் இல்லையேல் தாழ்த்தப்பட்டவர ்கள் முன்னேறி இருக்கமுடியாது. தாழ்த்தப்ட்டவர் களையும் ஈ.வே.ராமசாமி நாயக்கரையும் பிரித்துப்பேசமு டியாது என்றெல்லாம் பகுத்தறிவுவாதிக ள் பிதற்றிக் கொண்டுவருகிறார்கள்.
ஆனால் உண்மை என்ன தெரியுமா?
ஈ.வே.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களிடமிரு ந்து தாழ்த்தப்பட்டவர ்களைப் பிரித்தே பார்த்திருக்கிற ார். சாதி இந்துக்களைவிட தாழ்ந்தவர்கள்தா ன் தாழ்த்தப்பட்டவர ்கள். அவர்களுக்கு நிகராக தாழ்த்தப்பட்டவர ்கள் வரமுடியாது, வரவும் கூடாது என்பதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கருத்து.
காந்திஜி,”கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரையில் செல்லமுடியுமோ அந்த அளவுவரையில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனங்கள்) செல்லலாம்”என்று சொன்னபோது அதன் மீது ஆத்திரப்பட்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியது என்ன தெரியுமா?
”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லை யானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட் டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடா து” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.
(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி)
தாழ்த்தப்பட்டவர ்களுக்காக உழைத்தவர் என்று சொல்லுகின்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், பறையர்களை சூத்திரர்களோடு ஒன்றிணைக்கக்கூட ாது என்று சொல்கின்றார். காரணம் சூத்திரர்களோடு சேர்த்தால் நடுசாதியாக இருந்த சூத்திரர் கீழ்ச்சாதியாக ஆக்கப்பட்டுவிடு வார்களாம். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.
தாழ்த்தப்பட்டவர ்களை சூத்திரர்களோடு சேர்த்ததை அனுமதிக்கக்கூடா து என்று ஆத்திரத்தோடு சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தானா தாழ்த்தப்பட்டவர ்களுக்காகப் பாடுபட்டவர்? தாழ்த்தப்பட்டவர ்களை கொடுமைப்படுத்து வது சாதி இந்துக்கள்தான். பிராமணர்கள் அல்ல என்று தாழ்த்தப்பட்டவர ்களே சொல்லுகின்றனர். ஆனால் இந்த உண்மையை மறைத்து தாழ்த்தப்பட்டவர ்களுக்கு எதிரி பிராமணர்கள்தான் என்று அடையாளம் காட்டியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்.
ஏனென்றால் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர ்களை கொடுமைப்படுத்து வது தெரியக்கூடாது. தாழ்த்தப்பட்டவர ்கள் சாதி இந்துக்களுக்கு எதிராகக் கிளம்பிவிடக்கூட ாது. அதனால்தான் பிராமணர்களை எதிரியாகக் காட்டினார்.
எஸ்.வி. ராஜதுரை கூறுகிறார்:-
பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்க விஷயத்தில் அம்பேத்கர் ஏமாந்து போய்விட்டார் என்றும் பிற்படுத்தப்பட் ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்றும் ஒரு மனத் தாங்கல் பெரியாரிடம் கடைசிவரை இருந்தது.
அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர ்களுக்கு இட ஒதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்து தந்ததில் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு அக்கறையில்லை. மாறாக பிற்படுத்தப்பட் ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்ற கவலை மட்டும் இருந்தது இருக்கிறது என்ற சொன்னால் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய எண்ணம் சாதி இந்துக்கள் நலனில் மட்டுமே குறியாய் இருந்திருக்கிறத ு என்று தலித் எழுத்தாளர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?
ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
சிலர் கூறுவார்கள், சாதி ஓழிய வேண்டுமானால் ஒவ்வொருவரும் தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது! அது தப்பு! நம்மில் சாதி இல்லை. பார்ப்பான் ஒரு சாதி! மற்ற நாம் எல்லோரும் ஒரு சாதி! இந்த இரண்டுக்குள் நடப்பதுதான் கலப்பு மணம் எனலாம்.
(விடுதலை 06-04-1959)
நாமெல்லாம் ஒரே சாதி. நம்மில் சாதி இல்லை என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், தாழ்த்தப்பட்டவர ்களை சாதி இந்துக்களோடு சூத்திரர்களோடு சேர்க்கக்கூடாது என்று கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு தெரியுமா?
‘தாழ்த்தப்பட்டவர ்கள் – சாதி இந்துக்கள்’என்ற ு வரும்போது தன்னோடு தாழ்த்தப்பட்டவர ்களை சேர்த்துக்கொள்ள மாட்டார்.‘சாதி இந்துக்கள் – பிராணர்கள்‘ என்று வரும்போது போராட்டம் சூடுபிடிக்க தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்துக்கொள்வ ார். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தந்திரம்.
சாதி இந்துக்களோடு தாழ்த்தப்பட்டவர ்கள் திருமணம் செய்தால் அது கலப்பு மணம் இல்லையா? இது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம்? தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது. வேறு வேறு சாதியில் திருமணம் செய்யச் சொன்னால் அது தப்பாம் – இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.
48வயது வரை‘நாயக்கர்’என ்ற சாதிப்பெயரை விடாமல், தன்னுடைய நாயக்க சாதிப்பற்றை காண்பித்தவர்தான ் இந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர்.
நாம் இப்படிச் சொன்னால் உடனே பகுத்தறிவுவாதிக ள் 1924ல் நடந்த வைக்கம் போராட்டத்தைச் சொல்லுவார்கள்.
இந்த வைக்கம் போராட்டம் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட முயற்சியால் – சுயமரியாதை இயக்கத்தால் நடத்தப்பட்டப் போராட்டம் அல்ல. அந்தப் போராட்டம் நடத்த ஏற்பட்ட செலவும், ஈ.வே.ராமசாமி நாயக்கரோ அல்லது அவருடைய இயக்கமோ கொடுத்தது அல்ல. அப்போது அவருடைய இயக்கமே தோன்றவில்லை. அந்தப் போராட்டம் தேசிய காங்கிரஸ் சபை வழிகாட்டுதலினால ் கேரள காங்கிரஸால் நடத்தப்பட்ட போராட்டம் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஈ.வே.ராமசாமி நாயக்கரும் காங்கிரஸில் இருக்கும்போதுதா ன் காங்கிரஸ் சார்பாக அங்கு சென்று போராடினார். அதனால் வைக்கம்போராட்ட வெற்றிக்கு ஈ.வே.ராமசாமி நாயக்கரை மட்டும் உரித்தாக்குவது மிகையாகும்.
ஆனால் இங்கு ஒரு கேள்வி தாழ்த்தப்பட்டவர ்களிடையே எழுகிறது. அதாவது வைக்கம் போராட்டம் போல் தமிழ் நாட்டில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தலைமையேற்று ஏன் நடத்தவில்லை?
ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர ்களைப் பற்றி நிறைய பேசினார். நிறைய எழுதினார். மாநாடுகளில் தீர்மானங்களை இயற்றினார். ஆனால் செயலில் காட்டவில்லையே ஏன்?
தாழ்த்தப்பட்டவர ்களுக்காக போராட்டங்கள் நடத்தத் தயார் என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர ்களுக்காக என்னென்ன போராட்டங்களை நடத்தினார்?
பட்டியலிடத் தயாரா?
முதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர ்களுக்கு கொடுமை ஏற்பட்டபோது அதை எதிர்த்து ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா? இதுபோன்ற சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர ்கள் தாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா? இதுபோன்ற சம்பவங்களில் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய பங்கு என்ன என்பதைத் தெளிவுபடுத்துவா ர்களா பகுத்தறிவுவாதிக ள்?
சுதந்திரப் போராட்டம் என்று சொன்னாலே மகாத்மா காந்திஜியின் ஞாபகம் வருவதுபோல், வைக்கம் போராட்டம் என்று சொன்னாலே ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஞாபகம் தான் வருகிறது. ஆனால் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று சொன்னாலே நேதாஜி, வ.உ.சி. பாரதியார், போன்றவர்கள் ஞாபகத்தில் வருகிறார்கள். அதேபோல் வைக்கம் போராட்ட வீரர்கள் என்று சொன்னால் ஈ.வே. ராமசாமி நாயக்கரைத் தவிர வேறு யாராவது பெயர் நமக்கு ஞாபகம் வருகிறதா?
யார் பெயரும் ஞாபகம் வராது.
ஒருவேளை ஈ.வே. ராமசாமி நாயக்கர் மட்டும்தான் வைக்கத்திலே போராடினாரா? இல்லையே கே.பி. கேசவமேனன், டி.கே. மகாதவன், ஜார்ஜ் ஜோசப் போன்ற பலபேர் போராடி சிறை சென்றார்களே- அவர்களின் பெயரெல்லாம் வெளிவராமல், வைக்கம் போராட்டமே ஈ.வே. ராமசாமி நாயக்கரால்தான் துவக்கப்பட்ட மாதிரி எல்லோராலும் பேசப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் மற்ற தலைவர்களுடைய பங்கை மறைத்து ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பெயரை மட்டும் முன்நிறுத்துகின ்றனர். காரணம் வைக்கம் போராட்ட வெற்றி ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு மட்டுமே போய்ச்சேர வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்த நினைப்பு அவர்களை எந்த அளவுக்கு பொய் சொல்வதிலும், குழப்பத்திலும் கொண்டுபோய் விட்டிருக்கிறது தெரியுமா? அந்த விபரங்களை சற்று பார்ப்போம்.
”வைக்கம் போராட்டத்தில் 19 பேர் திருவிதாங்கூர் அரசாங்கத்தரால் கைது செய்யப்பட்டுவிட ்ட பிறகு, சிறையிலிருந்தபட ியே யோசித்து தோழர்கள் ஜார்ஜ் ஜோசப்பும், குரூர் நீலகண்ட நம்பூதிரியும் ஈ.வே.ராவுக்கு உடனே வரவும் என்று ஒரு கடிதம் எழுதினார்கள்,”எ ன்று சாமி சிதம்பரனார். ஈ.வே. ராமசாமி நாயக்கர் அவர்களிடமே காட்டி, அவர் சொன்ன திருத்தங்களை ஏற்று பின்னர் புத்தகமாக வெளியிடப்பட்ட,” தமிழர் தலைவர்”என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்ன சொல்கிறார் தெரியுமா?
”எனக்கு பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பும், கேசவமேனும் சேர்ந்து கையெழுத்துப் போட்டு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்கள்” என்று”வைக்கத்தி ல் தீண்டாமையை ஒழித்த தந்தை பெரியார்”என்ற தம் புத்தகத்திலே கூறுகிறார்.
இந்த இரு நூல்களிலும் இரு வேறுபட்ட பெயர்களை ஈ.வே. ராமசாமி நாயக்கரே கூறுகிறார்.
வைக்கம் போராட்டத்தின் வெற்றி வீரர் என புகழப்படும் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு யார் கடிதம் அனுப்பியது என்பதிலே கூட குழப்பம் போல் தெரிகிறது. தனக்குக் கடிதம் அனுப்பியது குரூர் நீலகண்ட நம்பூதிரியா? அல்லது கேசவமேனனா என்று சொல்வதில் குழப்பம் ஏன்?
காந்திஜியின் பங்கு
18-10-1973 ஆம் ஆண்டு திருச்சி வானொலியில்ஈ.வே. ராமசாமி நாயக்கர் வைக்கம் பற்றி கூறுகிறார்:-
”காந்திதான் இதை செய்ய வேண்டாம் என்று சொன்னவர், காந்திக்கு இதில் சம்பந்தமே இல்லை”
(நூல்: வைக்கம் போராட்ட வரலாறு – வீரமணி)
வீரமணி கூறுகிறார்:-
”வைக்கம் போராட்டத்தில் – முதலாவது உண்மை என்பது அந்தப் போராட்டத்தினைக் காங்கிரஸ் தலைமை ஆதரிக்க மறுத்தது”.
”காந்தியார் வைக்கம் போராட்டத்திற்கு எதிராக இருந்தார் என்பதுதான் உண்மை”.
”போராட்டத்தின் தொய்வுக்குக் காரணமென்ன என்றால் அவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னாலிருந்தே காங்கிரசில் காந்தியாரின் ஆதரவைக் கோரினார்கள். காந்தியார் தம்முடைய ஆதரவைத் தரவில்லை என்பது மட்டுமின்றி போராட்டத்தின் எதிரிகள் சொன்னதையே ஒரே பக்கமாகக் கேட்டுக் கொண்டார்”.
(நூல்:- வைக்கம் போராட்ட வரலாறு – வீரமணி)
ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சீடர்சின்னக் குத்தூசி கூறுகிறார்:-
”வைக்கம் போராட்டம் காந்தியடிகளின் கட்டளைப்படி நடத்தப்பட்ட போராட்டம் அல்ல. அந்தப் போராட்டத்தை காந்தியடிகளே ஆதரிக்கவில்லை”.
(நக்கீரன் 31-04-1999)
இவ்வாறு காந்தியடிகளைப் பற்றி ஈ.வே. ராமசாமி நாயக்கர் முதல் அவருடைய சீடர்கள் வரை வைக்கம் போராட்டத்தில் காந்தியடிகளுடைய ப் பங்கை மறைத்து அவதூர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தப் பொய் பிரச்சாரம் உண்மைதானா? என்பதைப் பார்ப்போம்.
”பெரியாரியம்’‘ என்ற ஒரு நூலுக்கு தலைப்பிட்டு,‘வை க்கம் அறப்போர் பவழவிழாக் கருதரங்க மலர்’ஒன்றை பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது . அந்த மலரில்‘வைக்கம் அறப்போர் – ஒரு வரலாற்றுப் பார்வை’என்று தலைப்பிட்டுமுனை வர் அ.கா.காளிமுத்து அவர்கள் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில் காந்தியடிகளுடைய பங்கை மற்ற நூல்களின் துணை கொண்டு எழுதியுள்ளார். ஆதலால் வைக்கம் போராட்டத்திலே காந்தியடிகளுடைய பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.
டி கே மாதவன்
”(வைக்கம்) பிரச்சனையை அரசியல் ரீதியாகப் போராட வேண்டுமென்பதற்க ாக திரு.டி.கே. மாதவன் போன்ற ஈழவத் தலைவர்கள் இந்திய தேசிய காங்கிரசு சபையை அணுக விரும்பினார். அதற்காக அக்கட்சியின் ஓத்துழைப்பை நாட, அச்சமயத்தில் நெல்லையில் தங்கியிருந்த காந்தியடிகளிடம் டி.கே. மாதவன் இப்பிரச்சனையை எடுத்துச் சென்றார். காந்தியடிகளும் இதன் முக்கியத்துவத்த ை உணர்ந்தாலும் உடனடியாக இது பற்றி முடிவு எடுக்க விரும்பவில்லை.
பின்னர் சில நாட்கள் கழித்து காந்தியடிகள் டி.கே.மாதவனுக்க ு ஒரு தந்தி மூலம் ஈழவர்களும் மற்றைய கீழ்ச்சாதியினரு ம் கோவில்களில் நுழைய எல்லாவித உரிமையும் உண்டு என்று செய்தியனுப்பினா ர். இச்செய்தி கேரளமக்களின் கவனத்தை ஈர்த்தது. முற்போக்கு எண்ணம் உள்ள வைதீகர்கள் கூட இதை ஆதரித்தனர்” என்று எழுதுகிறார் அ.கா. காளிமுத்து. அதனால் வைக்கம் பிரச்சனைக்கு காந்தியடிகள் 1922-23லேயே ஆதரவு கொடுத்திருக்கிற ார் என்பது தெளிவு.
RSS feed for comments to this post