தமிழ்த் தேசியம் பேசுகிறோம்,
தமிழ்மொழி வாழ்த்துப் பாடுகிறோம். ஆனால் தமிழ்ப் பெற்றோர்கள் புதுமை என்ற போர்வையில் தங்கள் பிள்ளைகளுக்கு அறம்புறம் சிதம்பரமாகப் பெயர் வைக்கிறார்கள். அவற்றை எங்கிருந்து பொறுக்குகிறார்களோ யாம் அறியோம். சமற்கிருத்த எழுத்துக்களான ஹ, ஸ்ரீ, ஜ, ஸ, ஷ போன்றவற்றில் பெற்றோர்களுக்கு அளவுகடந்த மோகம்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையில் ஒரு கவிதைப் போட்டி நடந்தது. அதில் பரிசு பெற்றவர்களின் பெயர்கள் பின்வருமாறு இருந்தன:
அபிநயா, பிரதாயினி, நிறோசனா, கரஜன், டிலுக்கா, சத்யசனாதன், நிசாந்தினி, பவிசாயினி, அபிவர்மன், லோஜினி, ஜிஸ்ணுகா, தர்சினி, சோபிகா, நிலுக்ஷனா, ரானுகா, பாரதப்பிரியா, சுதர்ணியா, ஸ்ரீலங்கரூபன், ஜஸ்மிகா, ரானுகா, அபிவர்ணா, சரணியா, புஸ்பராசா, சிந்துஜா, சக்தீனா, யகிர்தா, நருமதா, கோஜியா, நவரூபன், தவேதன், மாதுரி, அஸவினா, ஹிருத்திக், மேருயா, பானுஜன், பிருந்தாஜினி, சாருஜா, ஹிசோன்.
இரண்டே இரண்டு பெயர்கள் மட்டும் தமிழில் இருந்தன. தமிழ்வாணி, தமிழினி!.
தகவல்: ஐயா நக்கீரன்
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே செண்பகப் பாண்டியன் இருந்திருந்தால் தூய தமிழ் பெயர்கள் வைக்கும் பெற்றோர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்து இருப்பார் ஆனால் இருப்பதோ தமிழ் விரோத அரசு !என்ன செய்வது?
சரியான ஊக்குவிப்பும் கண்டிப்பும் அவசியப்படுகிறது
RSS feed for comments to this post