மோடி அரசு உடனடியாக வீழ்த்தப்பட வேண்டும். கடந்த ஒன்பது ஆண்டுகளில் தேசிய இனங்களை ஒழிப்பதே அதன் முதன்மைச் செயல்பாடாக இருந்து வருகிறது. முதலாவதாக, ஜம்மு-காஷ்மீர் தேசிய இனத்தின் மாநில இருப்பையே முற்றாக ஒழித்துக் கட்டியது. எல்லா மாநிலங்களையும் ஒழித்து 100 ஜனப்பத மண்டலங்களாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. தேசிய இனங்களின் பொருளாதாரத்தை முற்றாக ஒழிக்கும் திட்டம் தான் ஜி.எஸ்.டி.வரித் திட்டம். பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலங்களின் பொருளாதாரத்தை ஒழித்துக் கட்டுவது மோடி அரசின் கொள்கையாகும். அதனால் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி.வரியைக் கொடுக்க மறுக்கிறது.

 மணிப்பூர் மக்களை சாதி அடிப்படையில் மோத விட்டு பிளவுப் படுத்தி வருகிறது. சாதிய மோதலை இந்துத்துவ-கிறித்துவ மோதலாக மாற்றி 40,000-த்துக்கும் மேலான மக்களை மணிப்பூரை விட்டு வெளியேற்றுகிறது. அவர்களை இந்துத்துவத்தில் இழுக்க கட்டாயப் படுத்துகிறது. இடஒதுக்கீட்டு கொள்கையை சீர்குலைக்கிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்து முசுலீம் மோதலை உருவாக்கி வருகிறது. உணவு உண்பதிலும் உடை உடுத்துவதிலும் கூட பார்பனியக் கொள்கையைத் திணிக்கிறது. தேர்தலில் ஒரு இடத்தில் கூட முசுலீம்களை நிறுத்தாமல் தானே இந்துக்களின் ஒரே தலைவன் எனக் காட்டி வருகிறது. கர்நாடகத் தேர்தலிலும், உத்திரப் பிரேதேசத்திலும், பீகாரிலும் இம்முயற்சியை பா.ஜ.க. மேற்கொண்டது

கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இசுலாமிய எதிர்ப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியதை பா.ஜ.க.வின் வெற்றி இடங்கள் காட்டுகின்றன. ஏறக்குறைய எட்டு மாதங்கள் விவசாயிகளின் போராட்டம் டில்லியில் நடைபெற்றது. லட்சக்கணக்கில் விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்களைப் பார்த்து பேசக் கூட மோடி போகவில்லை. மோடி ஒரு கொலைகாரன் என்று மக்களை உணரச் செய்யும் வெளியிடாகேவே பி.பி.சி.-யின் ஆவணப் படம் வெளிவந்து உறுதி செய்தது. உடனே மோடி அரசு பி.பி.சி.-யின் ஆவணப் படத்தை வெளியிடத் தடை ஏற்படுத்தியது. மோடிக் கும்பலின் மீது விழுந்த மாபெரும் இன்னொரு இடி இண்டன்பா்க் அறிக்கை வெளியிட்ட அதானியின் பங்குச் சந்தை திருட்டாகும். அதானி குழுமம் பல லட்சம் கோடி ரூபாய் பங்குச் சந்தையில் மோசடி செய்வதற்கு பி.ஜே.பி. மோடிக் கும்பல் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. கொரானா காலத்தில் உலகில் உள்ள முதலாளிகள் பெரும் சரிவைச் சந்தித்தப் போது அதானி உலகப் பெரும் பணக்காரர்களின் வரிசையில் இரண்டாம் இடத்தை தாவிப்பிடித்தார். இது குறித்த விவாதத்தை மோடிக் கும்பல் பாராளுமன்றத்தில் நடத்த மறுக்கிறது. எனவே ஜனநாயகத்தை பெயரளவுக்கு ஏற்காத கட்சிதான் பி.ஜே.பி. என்று மக்கள் பெருமளவு உணரத் தொடங்கிவிட்டனர்.

மல்யுத்த போட்டிகளில் வெற்றிகளைப் பெற்ற பெண்கள் மீது பாலுறவு மோசடிகளைச் செய்த பெருங்கயவன் பிரிஜ் பூஷன் சி்ங் பா.ஜ.க. கட்சியின் உத்தரப் பிரேதேச தலைவர்களில் ஒருவன். ஜனவரி மாத இறுதியிலேயே அவன் மீது மல்யுத்த வீரா்கள் குற்றம் சுமத்தினர். காவல் துறை மல்யுத்த வீர பெண்களின் குற்றச்சாட்டை ஏற்கவே இல்லை.. பெண் வீரர்கள் நீதிமன்றதிற்கு சென்று நீதிமன்றம் காவல்துறையை குற்றாய்வு செய்து வழக்கைப் பதிவு செய்யும்படி அறிவித்த பின்தான் காவல் துறை வழக்கைப் பதிவு செய்தது. குற்றவாளியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாகப் போராடிய பெண் வீரர்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியது, கைது செய்தது. இதுதான் பி.ஜே.பி. மோடி மன்னனின் ஆட்சி. அமித்ஷா பெண் வீராங்கனைகளை வேலைகளிலிருந்து நீக்கப்போவதாக மிரட்டியுள்ளார்.

புதிய பாராளுமன்ற திறப்பு மோடியின் இழிநிலையை மக்களுக்கு அம்பலப்படுத்தியது. செங்கோலை அவர் வைத்து நடத்திய நாடகம் தமிழ் நாட்டு மக்களுக்கு இரண்டாம் புலிகேசி வடிவேலை நினைவுப்படுத்தியது. செங்கோலை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். கண்ணகியின் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த பாண்டிய மன்னன் செங்கோலுடன் வீழ்ந்து உயிர்விட்டான். “நானே கள்ளன்” என்று கூறி நேர்மையின் உச்சத்தில் இருந்து உயிர்விட்டான். அவனது மனைவியும் உயிர்விட்டாள். பாண்டிய மன்னனின் செங்கோல் வீழ்ந்தது. பல்லாயிரம் கொலைகளுக்கு காரணமான மோடியின் கையில் செங்கோல் இருக்கிறது. அவரது மனைவியாக அமித்ஷா இருக்கிறார். அந்த செங்கோல் தமிழ்நாட்டுடையது. அது மோடியை அமித்ஷாவை வீழ்த்தும் என மக்கள் நம்புகின்றனா்.

பி.ஜே.பி. மோடிக் கும்பல் கொலை, கொள்ளையில் மட்டுமல்ல, நிர்வாகத்திலும் கோமாளிகள் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. அதில் ஒடிசாவில் நடைபெற்ற கோரமண்டல் அதிவிரைவு தொடர்வண்டி விபத்தும், பணம் மதிப்பு இழப்பு நடவடிக்கையும் சிறந்த எடுத்துக்காட்டுகள். 2016 நவம்பா் 8-ல் ஒரே இரவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பை இழந்தன. இதற்கு காரணம் கருப்புப் பணத்தை ஒழிப்பதாக மோடிக் கும்பல் கூறியது. அது தோல்வியில் முடியவே, 2023 செப்டம்பா் 30-லிருந்து 2000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பு இழப்பை அறிவித்துள்ளது. இந்நடவடிக்கையால் 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் வரிசையில் காத்துக்கிடந்து நூற்றுக்கணக்கானோர் இறந்ததும், நாட்டின் பொருளாதாரம் முறிந்ததும்தான் மிச்சம்.

அதிகாரத்திமிரும் - ஆணவத்தின் உச்சமும்தான் பார்ப்பனியத்தின் நடைமுறைக் கொள்கை. மோடியும், அமித்ஷாவும் பார்ப்பனியத்தின் கைக்கூலிகேளே. இதர அமைச்சர்களும் பார்ப்பனிய ஆளும்வர்க்கத்தின் எடுபிடிகளே. இன்றைய அரசு அதிகாரம் பார்ப்பனிய அதிகாரமே என்பதை இந்திய நாட்டின் அனைத்து தேசிய இன மக்களும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதனை மிகத்தெளிவாக உணர்ந்து கொண்டவர்கள் தந்தைப் பெரியாரும், அம்பேத்கரும்தான். ஆனால் பெரியாரை இழிவுப் படுத்துவதை கொள்கையாகக் கொண்ட பார்ப்பனியம் அம்பேத்கரை தன்னுடன் இணைத்து கொள்ள பெரும் நாடகங்களை நடத்தி வருகிறது. அம்பேத்கர் பெயரை பயன்படுத்தும் பிழைப்புவாதக் கட்சிகளை தன்னுடன் இழுத்துக் கொள்கிறது. அம்பேத்கரின் இந்தியக் கொள்கையை பார்ப்பனியக் கூட்டம் தனது ஆதிக்கக் கொள்கையாக பயன்படுத்துகிறது.

பெரியாரின் தமிழ்நாடு விடுதலைக் கொள்கை பார்ப்பனியத்திற்கு பேரிடியாக இருப்பதால் பெரியாரை பொய்யாகக் கூட பார்ப்பனியக் கூட்டத்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனினும் பெரியாரியத்தை முற்றாக விட்டுவிட்ட அ.தி.மு.க. அமைப்பையும், பெரியாரியத்தை முதன்மையாகப் பயன்படுத்த தயங்கும் தி.மு.க.-வையும் பார்ப்பனியம் தனக்குச் சாதமாக மாற்றிக் கொண்டுதான் வருகிறது. பெரியாரின் தேசிய இன உணர்வு கொள்கையும், அம்பேத்கரின் ஜனநாயகக் கொள்கையும் பார்ப்பனியதுக்கு பேரச்சுறுத்தலாக இருக்கிறது. நமது தமிழ்த் தேச இறையாண்மை அமைப்பு மார்க்சியத்தை முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறது. மார்க்சிய-லெனினிய மாவோவிய சிந்தனை நமது தத்துவ, அரசியல், அமைப்பு வழியாகும், நமது அரசியல் வழி தமிழ்த்தேச இறையாண்மையை தமிழக மக்களிடம் கொண்டு செல்வதாகும். அதனை முன்னெடுப்போம் வெற்றி பெறுவோம்.

Pin It