அந்திய காலம் வந்ததடியே! - பைந்தொடியே!
- இளம்பிடியே! பூங்கொடியே!
சிந்தை ஒன்றாகி நாம் இன்பத்தின்            எல்லை
தேடிச் சுகிக்கையில் எனக்கிந்தத்           தொல்லை
வந்ததே இனி நான் வாழ்வதற்           கில்லை
மனத்தில் எனக்கிருப்ப தொன்றே - அதை -இன்றே -
குணக்குன்றே! - கேள்நன்றே!           (அந்நிய)
கடும்பிணி யாளன்நான் இறந்தபின்,            மாதே!
கைம்பெண்ணாய் வருந்தாதே, பழிஎன்றன்            மீதே.
அடஞ் செய்யும் வைதிகம் பொருள் படுத்            தாதே!

ஆசைக் குரியவனை நாடு -மகிழ்வோடு - தார்சூடு
                    நலம்தேடு! (அந்நிய)
கற்கண்டு போன்றபெண் கணவனை இழந்           தால்
கசந்த பெண் ஆவது விந்தைதான் புவி           மேல்!
சொற் கண்டு மலைக்காதே உன் பகுத்           தறிவால்
தோஷம், குணம் அறிந்து நடப்பாய் - துயர் கடப்பாய் -
துணை பிடிப்பாய் - பயம் விடுப்பாய்.           (அந்நிய)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.