periyar kamarajar 489

டில்லியில் காமராஜர் தங்கி இருந்த வீட்டுக்கு நெருப்பு வைத்து விட்டார்கள், பார்ப்பனர்கள்! ஏன் இப்படிச் சொல் லுகின்றேன் என்றால் நெருப்பு வைத்த நாளில் சிருங்கேரி சங்கராச்சாரி, பூரி சங்கராச்சாரி முதலிய பார்ப்பன சமு தாயத் தலைவர்கள் டில்லியில் இருந்து இருக்கின்றார்கள்; தவிரவும் சன்னி யாசிகள் (சாதுக்கள்) என்னும் பேரால் ஆயிரக்கணக்கான பார்ப்பனர்கள் பல பாகங்களிலுமிருந்து அன்று டில்லிக்கு வந்து இருக்கின்றார்கள். ஏன் இந்த சன்னியாசிகளை பார்ப்பனர்கள் என் கின்றேன் என்றால், பார்ப்பனர் அல்லாத (சூத்திர) ஜாதிக்கு சன்னியாசம் கொள்ள உரிமை இல்லை. அவனை சாது வென்றோ, சன்னியாசி என்றோ சொல்ல மாட்டார்கள்.

ஆகவே அன்றைய கலவரத்துக்கு, காலித்தனத்துக்கு நேரடியாக சம்பந்தப் பட்டவர்களும், தூண்டிவிட்டவர்களும், ஆதாரமாக இருந்தவர்களும், தலைமை வகித்தவர்களும் பார்ப்பனர்கள் தவிர, மததர்ம சம்பிரதாயங்களில் பார்ப்பனர் களுக்கு சீடர்களாக இருந்தவர்களும் தான் காரணஸ்தர்கள் ஆவார்கள் என்ற உறுதியால்தான் சொல்லுகின்றேன். மற்றும் இராஜாஜி எலெக்ஷனுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியை ஒழித்தாக வேண் டும் என்றும், எந்த அதர்மத்தைச் செய் தாவது ஒழித்தாக வேண்டும் என்பதாகச் சொன்னதும், அகிம்சையைக் கடை பிடிக்க வேண்டியதில்லை என்பதாகப் பேசியதும் எனது உறுதிக்கு ஆதாரம் ஆகும்.

வருணாசிரம தர்மத்தை ஒழித்ததை எதிர்க்கவே இக்கலவரம்

பசுவதைத் தடுத்தல் என்பது ஒரு பொய்யான காரணமேயாகும். உண்மைக் காரணம் பார்ப்பனருடைய வருணாசிரம தர்மத்துக்குக் கேடுவந்து விட்டது என்பது ஒன்றேதான். அந்தக் கேட்டை உண்டாக் கினது. காமராஜர் என்கின்ற ஒரே காரணம் தான் காமராஜர் இருந்த வீட்டுக்கு நெருப்பு வைக்க முக்கியமான காரணமாகும். பார்ப்பானுக்கு மாட்டுக் கொலையைப் பற்றி அக்கறை இருக்கின்றது என்பது அப்துல்காதர் ஆடி அமாவாசை அன்று தன் தகப்பனாருக்கு தர்ப்பணம் கொடுத் தார் என்பது போன்ற கதையேயாகும். இந்த சாதுக்கள், சங்க ராச்சாரியார்கள், மற்றும் சர்வ பார்ப் பனர்களுக்கும் முன் னோர்களாகிய ரிஷிகள், முனிவர்கள், மகான்கள், தேவர்கள், இராமன், கிருஷ் ணன் முதலிய எல்லா ஆரியர்களுக்கும் மாடு தான் முக்கிய ஆகாரமாய் இருந் திருக்கின்றது! இவ்வுண்மை இன்றும் மனுதர்ம சாஸ்திரத்தில், பார்ப்பன தர்மமாய் இருந்து வருகின்றது.

உலகில் உள்ள மக்கள் 100-க்கு 100 பேர் மாட்டின் பாலைக் குடிப்பதும், மாட்டு உழைப்பைப் பயன்படுத்திக் கொள்வதும் 100-க்கு 50 பேருக்கு மேலாக மாட்டு மாமிசம் உண்பதும், 100-க்கு 90 பேர் வேறு பல மாமிசம் உண்பர்களாகவே இருந்து வருகின் றார்கள்.

இப்படிப்பட்ட மக்களுக்கு பசுவதைத் தடுப்பு உணர்ச்சி ஏற்பட்டது என்றால், இதை எந்த மடையன் தான் உண்மை என்று நம்புவான்? எப்படி அது யோக் கியமான காரியமாய் இருக்க முடியும்? காமராசர் பார்ப்பனரை வதை செய்யும் காரியத்தை உண்டாக்கியவர் அதுதான் சமதர்மம் என்பது. காமராஜரின் சமதர்மம் என்பதே பார்ப்பனக் கொலை தர்மம் என்பதுதான் தத்துவார்த்தமாகும்.

காமராஜர் சமதர்மத்தில் எல்லோ ருக்கும் படிப்பு, எல்லோருக்கும் வீடு, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் உணவு, எல்லோருக்கும் சம அந்தஸ்து ஏற்பட்டுவிடும் பிறகு இதில் மனித பேதம் எப்படி இருக்க முடியும்? மனித பேதம் தானே பார்ப்பனியம் என்பது.

முற்றிலும் பார்ப்பனர் - ஆதரவாளர் செய்த சதியே!

ஆகவே இதனால்தான் இந்த பார்ப் பனியக் கலவரத்துக்கும், காலித் தனத் திற்கும் பார்ப்பன குருமார்கள், பார்ப்பன சாதுக்கள், பார்ப்பன அதிகாரிகள், பார்ப் பனர்கள், பார்ப்பனப் பத்திரிகைக்காரர்கள், பார்ப்பன தர்மிகள் காரணமாக, காரிய சித்தர்களாக இருந்திருக்கின்றார்கள் என்ப தோடு, பிர்லா, பஜாஜ், டாட்டா முதலிய செல்வர்கள் பலபேர்கள் கூட்டமும், மற்றும் சொல்ல வேண்டுமானால் நந்தாக்கள் முதலிய மந்திரிகள் கூட்டமும் உடந்தை யாயும் ஆதரவாளர்களாகவும் இருந்திருக் கின்றார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

நேரு தங்கைக்கும், மற்றும் நேரு ஜாதிக் கும் இந்த சமதர்மம் எதிர்க்கப்பட வேண்டி யதாகவே இருந்து வந்திருக்கின்றது. மற்றும் நந்தாக்கூட்டம் பெரிய அழுக்கு மூட்டைக் கூட்டமாகும். இந்திய பிரதமர் தேர்தலுக்கு நடந்த போட்டியில் ஒருவராக நிற்க முனைந்தவர் நந்தா! அது வும் ஒரு பிரபல ஜோசியர் கட்டளைப்படி நின்றவர். தேதி மாற்றத்தால் விலகிக் கெண்டவர்! இப்படிப் பட்ட அவர் எப்படி சமதர்மத்துக்கு உடந் தையாக இருக்க முடியும்? எனவே, டெல்லி கலவரமும் காலித் தனமும் பார்ப்பனரின் மனுதர்மத் துக்கும் காமராஜரின் மனித(சம) தர்மத்திற்கும் ஏற்பட்டு நடந்துவரும் பலாத்காரப் போராட்டங்களில் ஒன்றேயாகும். எல்லாப் போராட்டங்களையும், கலவரத் தையும், காலித்தனங்களையும் விட நேற்று நடந்த டில்லி போராட்டத்தின் குறிப்பிடத் தகுந்த முக்கியம் என்னவென்றால்; காமராஜர் தங்கி இருந்த வீட்டை காமராஜர் உள்ளே இருந்து தூங்கிக் கெண்டு இருக்கும்போது நாலுபுறமும் சூழ்ந்து கொண்டு நாலு புறத்திலிருந்தும் நெருப்பு வைத்துக் கொளுத்தினதுதான் முக்கியமாக குறித்துக் கொள்ளதக்கதான சம்பவமாகும். இந்தச் செய்கை காலிக்கூட்டத்தினரால் இலக்கு வைத்துத் திட்டமிட்டு நடத்திய செய்கையாக இருக்க முடியாது, பார்ப்பன சங்கராச் சாரியார்கள் பலரும், சாதுக்களும், ஆனந்தாக்களும், பிர்லாக்களும், பஜாஜ், டாட்டாக்களும் அழுக்கு மூட்டை நந்தாக் களும் கூடி, கலகம் நடத்திட திட்டமிட்டு, பல லட்ச ரூபாய் உதவி, பல அதிகாரி களைச் சரிப்படுத்திக் கொண்டு நடத்திய சதித் திட்டமேயாகும்.

போலீஸ் 7-8 பேர்களை சுட்டது என் றால், ஏதோ அனாமதேயக் காலிகளைத் தான் சுட்டு இருக்குமே ஒழிய மேற்கண்ட கூட்டத்தினரில் ஒரு வரைக்கூட சுட வில்லை. சுட நினைக்கவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நான் 3ஆம் தேதி எழுதி 4ஆம் தேதி சென்னைக்கு பதிப்பிக்க அனுப்பிய, விடுதலை பெயர்போட்டு 6ஆம் தேதி எழுதிய சாதிப்பிரிவுகள் என்ற தலையங்கத்தின் நல்லவண்ணம் விளக்கிக் கூறி இருக்கின்றேன்.

அதில் இனி நடக்க வேண்டியது மந்திரி களைக் கொல்ல வேண்டியது தான் என்று எழுதி இருக்கின்றேன், ஆனால் டில்லி செய்கை மந்திரி களைக் கொல்லுவதாய் இல்லை.

மந்திரிகள் பல மாகாணங்களில் இச் செய்கைகளுக்கு ஆதரவானவர் களாக இருக்க நேர்ந்து விட்டதால் (காங்கிரஸ்) தலைவரையே கொல்லத் திட்டமிட்டு அவர் இருந்த வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கும்போது வீட்டைச் சுற்றி 4 புறத் திலும் நெருப்பு வைக்கச் செய்து விட் டார்கள், காமராஜர் தங்கியிருந்த வீட்டிற்கு புழக்கடைப்பக்கம் வெளியேற ஒரு வழி இல்லாதிருந்தால் காமராஜரின் கதி அன்று என்ன ஆகி இருக்கும்?

நாடெங்கும் கலவரம் பரவும் ஆபத்து

இனி இது தேசத் தலைநகரில் மாத்திரம் அல்லாமல் மாகாணங்கள் முழுவதிலும் இக்கொலை, நெருப்பு வைத்தல் காரியங்கள் பரவும் என்பதிலும் ஆட்சேபணை இல்லை. இன்று பல மாகாண ஆட்சித் தலைவர்கள், பார்ப்பன அடிமைகள் வருணாசிரமக் காவலர்கள், சமதர்ம விரோதிகள் என்று சொல்லும்படியாகவே அமைந்து விட் டார்கள்! ஆதலால் இந்த மாடல் டில்லிக் காலித்தனங்கள் இனி எல்லா மாகாணங் களிலும் ஏற்பட்டே தீரும் பலவற்றில் ஏற்பட்டே விட்டதே!

அதாவது பார்ப்பன எதிரிகள், பார்ப் பனரின் எதிரிக் கட்சித் தலைவர்கள் என்பவர்களைக் கொல்லவும் அவர்கள் வீட்டையும் நெருப்பு வைத்துக் கொளுத்த வுமான நிலை ஏற்படலாம். அவற்றிற்கு அரசாங்கம் பாதுகாப்பும் அதற்கு ஏற்ற அளவில் தான் இருந்து வரும். எதிர்க் கட்சிக்காரர்கள் (பார்ப்பன அடிமைக்கட்சிக் காரர்கள்) இப்போதே அடிக்கல் நாட்டிக் கொண்டு விட்டார்கள். அதுதான் அண்ணா துரையைத் தாக்கினார்கள் என்பது போன்ற கற்பனைகளாகும்.

தமிழ்நாட்டு ஆட்சி அமைப்பை மாற்றாவிட்டால் காமராஜருக்கு பாதுகாப்பு ஏற்பட்டுவிடுமே என்றுதான் கருதுகின்றனர். என்னைப் பற்றி கவலை இல்லை, எனக்கு ஒரு கால் நாட்டிலும், ஒரு கால் சுடு காட்டிலும் என்ற பருவத்தில் இருக் கின்றேன். ஆதலால் என்னைப் பற்றிக் கவலை இல்லை.

நாட்டின் ரட்சகர் காமராசர் இன்றேல், நாதியற்ற நிலைதானே?

காமராசர் இன்று இந்த நாட்டுக்கு இரட்சகராக இருக்கின்றார். அதனால் தான் பார்ப்பனர்களும் பார்ப்பன அடிமைகளும் காமராசர் மீது கண் வைத்து இருக்கின்றார்கள் - அவர் வீட்டைக் கொளுத்தினார்கள்.

காமராசருக்கு ஏதாவது ஏற்பட்டால் அவருக்கு ஒன்றும் நட்டம் இல்லை. அவரது தாயார்கூட மயக்கம் வரும்வரை அழுவார்கள் அவ்வளவுதான். பிறகு நம்நாடு வருணாசிரம தர்ம நாடாகி விடும்!

அதுமாத்திரம் அல்ல, இன்றைய பார்ப்பனக் கூலிகளான காங்கிரஸ் எதிர்கட்சிகளுக்கு, தலைவர்களுக்கு, பலர்களுக்கும் நாதியற்ற நிலை ஏற்பட்டு விடும். பழைய கருப்பர்களாக ஆகி விடு வார்கள், பிறகு நாடு என்ன ஆகுமோ? எப்படி ஆகுமோ? எப்படியோ இருக் கட்டும்; இனி காமராஜர் தக்க பாது காப்புடன் இருக்க வேண்டும். பார்ப்பன எதிர்ப்புக் கட்சித் தோழர்கள் ஒவ்வொரு வருக்கும் 6 அங்குல நீளத்திற்குக் குறையாத கத்தி ஒன்றை தற்காப்புக்காக வைத்துக் கொண்டிருக்க வேண்டும். கண்டிப்பாக சீக்கியர்களது மததர்மம் போல், கத்தி வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த காரியம் காமராஜரைப் பாது காக்க அல்ல. நம்நாட்டில் உள்ள 3 கோடி கீழ்ச்சாதி (சூத்திரனை) மக்களை இழி வில் இருந்தும், அடிமை நிலையில் இருந் தும், படுகுழிப்பள்ளத்தில், இருந்தும் வெளியாக்கிப் பாதுகாக்கவே ஆகும்.

நமது சரித்திரம் தெரிய, இந்த நாட்டில் காமராஜரைப் போல ஓர் இரட்சகர் இது வரை தோன்றியதே இல்லை. புராணங் களில் இரண்யர்கள், இராவணர்கள் தோற்றுவிக்கப்பட்டு இருக்கின்றார்கள், அவர்கள் எல்லாம் கொல்லப்பட்டதாக - பிரகலாதன், அனுமார், விபீடணன்களைக் கொன்று அழிக்கப்பட்டதாக எழுதி புராணங்களை முடித்திருக்கின்றார்கள்.

அந்தக்காலம் அப்படி; ஆனால் இந்தக் காலம் அதுபோன்ற புராண - சரித்திர காலம் அல்ல; உண்மை பிரத் யேக நடப்புக்காலம். இதில் அந்த வித் தைகளைப் பலிக்க விடக்கூடாது.

கத்தி வைத்துக்கொள்ளுங்கள்! காமராஜரை பாதுகாருங்கள்! மறுபடியும் எழுத இடம் வைத்துக்கொள்ளாதீர்கள்.

கண்டிப்பாய் கத்தி வைத்துக் கொள்ளுங்கள்! 

 -----------------------

காமராசர் கொலை முயற்சி சரித்திரம்  என்ற நூலிலிருந்து...

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It