சமீப காலமாக, அதாவது சுமார் ஒரு வருஷகாலமாக அநேக இஸ்லாம் வாலிபர்களுடனும், பல மௌல்விகளுடனும், இரண்டொரு மௌலானாக்களுடனும் நெருங்கிக் கலந்து பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் பல கிடைத்தன. அதிலிருந்து சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் பலர் முழுவதையும், சிலர் ஒன்றிரண்டு தவிர மற்றதையும் ஒப்புக்கொள்ளுபவர்களாகவே அறியமுடிந்தது.
ஆனால் கடவுள் என்பதைப் பற்றி மாத்திரம் அவர்களில் அநேகர் தங்கள் அபிப்பிராயத்தை வெளியில் எடுத்துச் சொல்லவே பயப்படுவதையும் சிலர் அப்புறம் இப்புறம் திரும்பிப் பார்த்துப் பேசுவதையும், பார்க்கும்போது நமக்கு மிக்க பரிதாபமாகவே இருந்தது.
அதில் ஒருவர் நம்மிடம் பேசுகையில் “நீங்கள் கடவுள் என்பதைப் பற்றி பேசும், எழுதும் எழுத்துக்கள் எல்லாம் இந்துமதக் கடவுள்களைப் பற்றி மாத்திரம் பேசுகின்றீர்களா? அல்லது மற்ற மதக் கடவுள்களையும் பற்றி பேசுகின்றீர்களா?” என்று கேட்டார்.
அதற்கு நாம் விடையளிக்கையில் “நீங்கள் கடவுள் என்பதற்கு என்ன பொருள் கொண்டு கேட்டிருந்தாலும் நான் கடவுள் என்று பேசுவதில், சர்வ சக்தியும், சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், உலகில் நடைபெறும் சகல நடவடிக்கைகளுக்கும் தானே காரண பூதனாயிருக்கின்றதும், அதை வணங்கினால் நமது தேவைகள் பூர்த்தியாகுமென்பதும், அதற்கு பணி விடை செய்தால் நமது குற்றங்கள் மன்னிக்கப்படும் என்பதும் நாம் உயிருடன் இருக்கும் போது செய்த கருமத்திற்குத் தகுந்த பலனை நாம் செத்தபிறகு நமது ஜீவன் அல்லது ஆத்மா என்பவைகளுக்கு அளிக்கின்றாறது என்னப்படுவதுமான கடவுள் என்பது எந்த மதத்தைச் சேர்ந்ததானாலும், அந்த அர்த்தம் கொண்ட கடவுளைப் பற்றித்தான் பேசுகின்றோம்” என்று சொன்னோம்.
“இந்தப்படி சொல்வதற்குக் காரணம் என்ன?” என்று அவர் கேட்டார்.
நாம் அதற்கு விடையளிக்கையில், “இந்த மாதிரியான ஒரு கடவுள் தன்மையை மக்களுக்குள் புகுத்துவதால் மனித வர்க்கம் தன் முயர்ச்சியற்று, முற்போக்கற்றுப் போவதற்கு இடமேற்படுகின்றது என்றும், இந்தியா இன்று இந்த மிருகப்பிராய நிலையில் இருப்பதற்கு இதுவே காரணம் என்றும், மற்றும் மக்களில் உயர்வு தாழ்வும், செல்வவானும், தரித்திரனும் இருக்க இதுவே காரணம்” என்றும் சொன்னோம்.
அதற்கவர் “அப்படியானால் உங்களுடைய கடவுள் சம்பந்தமான எழுத்துக்கள் எங்கள் ஆண்டவனையும் தானே சேர்த்துப் பேசுவதாயிருக்கின்றது” என்று சொன்னார்.
நாம் அதற்கு, நான் என்ன செய்யலாம், உங்களுக்காக வேண்டு மானால் இஸ்லாமானவர்கள் கடவுள் தவிர என்று சொல்லி விடட்டுமா? என்று சொன்னோம்.
அதற்கவர் சிரித்துக்கொண்டே, எங்களைப் பரிகாசம் செய்கிறீர்களா? என்று கேட்டுவிட்டு “நீங்கள் மேலே குறிப்பிட்ட குணமும், தன்மையும் கொண்ட கடவுளைப் பற்றித்தான் சொல்லுகின்றேன் என்று சொன்னபிறகு, இஸ்லாமானவர்கள் கடவுள் மாத்திரம் அதிலிருந்து எப்படி விலக்கப்படும் என்றும் இன்றைய தினம் எல்லா மார்க்கத்தாரும் இந்த மாதிரியாகத்தானே கடவுளைக் கருதிக் கொண்டிருக்கின்றார்கள்” என்று சொன்னார்.
அப்படியானால் அதற்கு நாம் என்ன செய்வதென்று சொன்னோம்.
அதற்கவர் “அதை மாத்திரம் விட்டுவிடக்கூடாதா” என்றார்.
நாம் எதை, இஸ்லாம் கடவுளை மாத்திரமா? என்றோம்.
அவர் மறுபடியும் சிரித்துக் கொண்டு “பொதுவாகக் கடவுள் என்பதையே தான் சொல்லுகின்றேன்.” என்று சொன்னார்.
நாம் மற்ற கடவுள்களைச் சொன்னால் உங்களுக்கு என்ன நஷ்டம் வந்துவிட்டது என்றும், வேண்டுமானால் உங்கள் கடவுளைச் சொல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் சொன்னோம்.
இவற்றை நாம் பரிகாசமாய் சொல்லுவதாக அவர் உணர்ந்து பிறகு உண்மையாய் பேசுவதாய்ச் சொல்லிப் பேசியதாவது :-
“நீங்கள் சொல்லுவதில் குற்றம் இருப்பதாக நான் சொல்லவரவில்லை. ஆனால் என்போன்றவர்கள் அதில் கலந்து கொள்ளமுடியவில்லை என்பது தான் எனது கவலையே ஒழிய கடவுளைப் பற்றிய கவலை எனக்குச் சிறிதும் கிடையாது. சுமார் பத்துவருஷ காலமாகவே எனக்கிருந்ததில்லை. ஆனாலும் கவலை இருக்கின்றதாக நம்பிக்கொண்டு நடக்கின்றவர்களைவிட நான் மிகவும் ஒழுக்கத்துடனும், நியதியுடனும் நடந்து வந்திருக்கின்றேன் என்று உறுதியாய்ச் சொல்லுவேன். ஆனால் என்னுடைய நடவடிக்கையை விட கடவுளைப் பற்றிக் கவலை கொண்டிருப்பதாக நான் நடந்து கொண்ட வேஷ நடவடிக்கையே என்னை பிறத்தியார் மதிக்கச் செய்திருக்கின்றதே அல்லாமல் என் ஒழுக்கத்தைப்பற்றி யாரும் மதிப்பதில்லை. ஆதலால் கடவுளைப் பற்றி கவலையில்லை என்று சொல்லிவிட்டால் என்னை எனது மார்க்கத்தார்கள் ஒழித்து விடுவார்கள்” என்று சொன்னார்.
அதற்கு நாம் உங்களுக்கு அந்த மாதிரி மக்களின் மதிப்பு வேண்டுமானால் அந்தப்படியே நடவுங்கள் இல்லாவிட்டால் தைரியமாய் உண்மையை எடுத்துச் சொல்லுங்கள் என்று சொன்னோம்.
பிறகு, அவர் கடைசியாக முஸ்லீம் வாலிபர்களுக்குள்ளாவது இப்படியொரு இயக்கம் ஆரம்பிக்கலாம் என்று கருதியிருக்கிறேன் என்று சொன்னார். அதற்கு நாம் மிகவும் சந்தோஷம் என்று சொன்னோம். பிறகு வேறு பல விஷயங்கள் பேசினோம்.
நிற்க, இந்தப்படியான எண்ணமுள்ள இன்னும் அநேக வாலிபர்கள் இருக்கின்றார்கள். இரண்டொரு வாலிபர்கள் இதற்காக அதாவது சுயமரியாதை இயக்கத்தின் மீதுள்ள ஆர்வத்தால் தங்களது மார்க்கத்தைக்கூட விட்டுவிடத் தயாராயிருப்பதாகச் சொன்னார்கள். அப்படி அவர் சொல்ல நேர்ந்த அவசியம் அவருக்கு மனித சமூகத்தினிடமிருக்கும் அன்பானது அவருடைய மார்க்கத்தைவிட பெரியதாகக் கருதியதேயல்லாமல் வேறல்ல.
ஆகவே, அப்படிப்பட்ட வேகமுள்ள வாலிபர்களானாலும், மௌல்விகளானாலும் தங்கள் சமூகத்திலுள்ள சில பழக்க வழக்கங்கள் மார்க்கத்தின் பேரினாலும், புரோகிதர்களாலும், இந்துக்கள் சாவகாசத்திலானாலும் அவை மனித இயற்கைக்கும், தர்மத்திற்கும் விரோதமாய் இருந்தால் அக் கொள்கைகளை அதிலிருந்து கொண்டே திருத்த முயற்சிப்பதுதான் பயனளிக்குமேயொழிய மார்க்கத்தை விட்டு திடீரென்று வெளியேறி விட வேண்டியதில்லை என்பதே நமது அபிப்பிராயம். இந்தப்படி அவர்களை அந்த மார்க்கக் கட்டளைப்படி நடந்து ஆண்டவன் என்பவரிடம் சன்மானம் பெறவோ, மோக்ஷமடையவோ நாம் அப்படிச் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் அந்த மார்க்கப் பேரைச் சொல்லிக்கொண்டாவது, அந்த சமூகத்தை சீர்திருத்தம் செய்யப் பயன்படுவார்களே என்கின்ற ஆசையின் மீதேயாகும்.
கமால் பாக்ஷா வீரர் மார்க்கத்தை வெளிப்படையாய் விட்டிருந்தாரானால், அவரால் அந்த சமூகத்திற்கு அவ்வளவு நன்மை செய்திருக்க முடியாது. ஆதலால் நமது முஸ்லீம் வாலிபர்களும், வங்காள முஸ்லீம் வாலிபர்கள் ஏற்படுத்திக் கொண்டிருப்பதுபோல இந்த மாகாணத்திலும் புரோகித ஒழிப்புச் சங்கமென்பதாக ஒரு ஸ்தாபனம் ஏற்பாடு செய்து கொண்டு அதன் மூலம் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் அநேகத்தை நிறைவேற்றி வைக்கலாம். அன்றியும் இந்தத் துறையில் மற்றவர்களைவிட முஸ்லீம்களுக்கு வேலை குறைச்சலாய் இருக்கின்றதென்றே சொல்லுவோம். ஏனெனில் அவர்களுடைய மார்க்கக் கட்டளைகள் என்பதில் பல ஏற்கனவே சுய மரியாதைக் கொள்கையாகவே இருக்கின்றன.
ஆகையால் கடவுளைப் பற்றிய பேச்சு மாத்திரம் அவர்களுக்கும் வேண்டியதில்லை என்பது நமது அபிப்பிராயமாகும். வேண்டுமானாலும் அதை முதலில் பிரசாரம் செய்வதைவிட மற்ற காரியங்களைச் செய்வதே அனுகூலமானதாகும். விவகாரம் வரும்போது அதைப் பற்றியும் பேச யாரும் பயப்படவேண்டியதில்லை. ஆனால் அது அவரவருடைய சொந்த அபிப்பிராயம் என்றுகூட சொல்லிக் கொள்ளலாம்.
ஆகவே முடிவாக நாம் சொல்லிக் கொள்வதென்னவென்றால் முஸ்லீம் வாலிபர்கள் இந்த தமிழ்நாட்டில் ஒரு புரோகித மொழிப்புச் சங்கம் ஏற்படுத்திக்கொண்டு மக்களை புரோகிதக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கும் படியும், தங்கள் தங்கள் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுக்க மக்களுக்குத் தைரியம் வரும்படியாகவும் செய்ய வேண்டியது முதல் கடமை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். இதற்கு அவசியமும் மற்ற இதன் முழு விபரங்களும் வேண்டுமானால் வங்காள முஸ்லீம் புரோகிதமொழிப்புச் சங்கத்தாரிடமிருந்து தகவல்களை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இதன் அவசியத்திற்குக் காரணம் அவர்கள் சொல்லுவதற்கு மேல் நாம் ஒன்றும் சொல்லிவிடமுடியாது. மூட நம்பிக்கை என்பதும் புரோகித ஆக்ஷியென்ப தும் எந்த மதத்திலும் இருக்கக்கூடாது என்பதை யாரும் ஒப்புக்கொள்ளுகின்றார்கள். ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மதத்தில் அவை இல்லை என்று சொல்லிவிட்டு அன்னிய மதத்தில் இருப்பதாகச் சொல்லு கின்றார்கள். ஆதலால் இன்ன மார்க்கத்தில்தான் இருக்கின்றது என்றும், இன்ன மார்க்கத்திலில்லை யென்றும் யாரும் வாதிட வேண்டியதில்லை. நடு நிலைமையிலிருந்து, தங்கள் பகுத்தறிவைக் கொண்டுபார்த்து, தங்களுக்கு இருப்பதாய் தோன்றினால் அதை விலக்கட்டும். தோன்றாவிட்டால் அப்ப டியே இருக்கட்டும் என்கின்ற கொள்கை வைத்தே முதலில் வேலை துவக்க வேண்டுமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். வேலை துவக்கினால் பொதுநல ஊக்கமுள்ள அநேக மௌல்விகள்கூட ஒத்துழைக்கத் தயாராயிருக் கின்றார்களென்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
-------------------------
தந்தை பெரியார் --”குடி அரசு” - துணைத் தலையங்கம் - 15.02.1931
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா
அய்யா பெரியாரின் இயக்கம் முன்னெடுத்த பகுத்தறிவு பிரச்சாரம் ஏன் இஸ்லாமாகவில்லை? எனவும்,அய்யா பெரியாரும் அவர்களின் தொண்டர்களும் ஏன் இஸ்லாம் ஏற்கவில்லை?எனவு ம் பல நாட்களாக என் உள்ளத்தை அரித்த கேள்விக்கு அய்யாவின் இந்த சம்பாஷனை கட்டுரை பதிலளித்துள்ளது .
“நீங்கள் கடவுள் என்பதற்கு என்ன பொருள் கொண்டு கேட்டிருந்தாலும ் நான் கடவுள் என்று பேசுவதில், சர்வ சக்தியும், சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், உலகில் நடைபெறும் சகல நடவடிக்கைகளுக்க ும் தானே காரண பூதனாயிருக்கின் றதும், அதை வணங்கினால் நமது தேவைகள் பூர்த்தியாகுமென ்பதும், அதற்கு பணி விடை செய்தால் நமது குற்றங்கள் மன்னிக்கப்படும் என்பதும் நாம் உயிருடன் இருக்கும் போது செய்த கருமத்திற்குத் தகுந்த பலனை நாம் செத்தபிறகு நமது ஜீவன் அல்லது ஆத்மா என்பவைகளுக்கு அளிக்கின்றாறது என்னப்படுவதுமான கடவுள் என்பது எந்த மதத்தைச் சேர்ந்ததானாலும் , அந்த அர்த்தம் கொண்ட கடவுளைப் பற்றித்தான் பேசுகின்றோம்” என்று சொன்னோம்".
கடவுள் பற்றிய அய்யா கூறிய கருத்துக்கு சரியான பதில் கூற இயலாத அன்றைய தமிழக முஸ்லிம்களின், மெளலவிகளின், இளைஞர்களின் அவலம் வருத்தத்திற்குர ியதே! அது பதில் கூறாத அன்றையவர்களின் குற்றமே ஒழிய இஸ்லாத்தின் குற்றமல்ல.
கடவுள் என்றால் யார்? அல்லது என்ன? என்ற கேள்விக்கு அய்யா வைத்திருந்த பொத்தம் பொதுவான விளக்கம் உலகை படைத்த உண்மை இறைவனாகிய இஸ்லாம் கூறும் இறைவனுக்கு பொருந்தாது என்பதை விளக்கியிருந்தா ல் அய்யா முஸ்லிமாகியிருப ்பார் என கருதுகிறேன்.
மத நிந்தனைகள் நிரம்பி வழிந்த கடந்த நூற்றாண்டில் தங்களின் கொள்கைகளை வென்றெடுக்க தேவாலயங்களால் துவைத்தெடுக்கப் பட்ட "விஞ்ஞானிகளும்" கிறித்துவ உலகத்தால் நைய்ய புடைக்கப் பட்ட யூதர்களும் கடவுள் என்ற சொல்லை சீரழித்தார்கள். .. சிறு குத்தியில் அடைத்தார்கள்.அந ்த குத்தியில் உள்ளதை கடவுளாக கடவுள் தத்துவமாக கருதிய எல்லோரும் அல்லது அது போன்ற கடவுள் கோட்ப்பாட்டுடைய ோரால் பாதிக்கப் பட்டோர் எல்லோரும் கடவுளை பற்றிய அபிப்பராயத்தில் அய்யாவின் விளக்கமாக தான் உள்ளனர்.
ஆனால்,கடவுள் என்பது அதுவல்ல;
கடவுள் எல்லா வல்லமையும்,ஆற்ற லும்,அதிகாரமும் ,பாவங்களை பொறுத்து மன்னிக்கவோ....த ண்டிக்கவோ முழு ஆற்றல் கொண்டவன் என்பதில் சந்தேகமில்லை.ஆன ால் கடவுளை ஏற்ப்பது கடவுளை மறுப்பது என்பது சாதாரண சடங்கு சம்பிரதாய சிந்தனையல்ல.தனி த்துவமான வாழ்வியல் கோட்ப்பாடு.
ஒருவன் இறை நம்பிக்கையளனாகி றான்,கடவுள் ஏற்ப்பாளனாகிறான ் என்றால் அவன் தனது வாழ்வை கடவுள் வகுத்த வாழ்வியல் படி நடத்தி செல்வதற்கு ஒப்புக் கொள்கிறான் என்றர்த்தம்.
கடவுள் காட்டிய வழியில்,இஸ்லாம் கூறும் கடவுள் காட்டிய வழியில்,தனி மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் எந்த தடையுமிலை...புர ோகிதமுமில்லை.ஒவ ்வொரு தனிமனிதனும் தனக்கு வழங்கப்பட்டிருக ்க கூடிய கடவுள் வழியை பின்பற்றி செல்ல எந்த தடையுமில்லை.
அதுவும் கடவுள் வழி என்பது வெறும் வாய் வழி சொல்லாகவோ அல்லது வழக்குக்கு மீறிய தத்துவமாகவோ ஆகாதிருக்க அதன் மனித முன் மாதிரியாக இறைவனின் தூதர் வாழ்ந்தும் காட்டியுள்ளார். எதை மனிதனால் பின்பற்ற முடியாதோ எதை மனிதனால் ஏற்க்கவோ சுமக்கவோ முடியாதோ அது போன்ற எது ஒன்றையும் அந்த மாமனிதர் கற்பிக்கவில்லை.
ஒரு முறை இறைதூதரின் வழிமுறை பற்றி தெரிந்து கொண்ட சிலர் அதில் தஙகளுக்கு திருப்தி இல்லை என எண்ணி புது முறையை புகுத்துவது போல் கூறினார்கள்:நாங ்கள் தொழுது கொண்டேயிருக்க போகிறோம்,நோன்பு நோற்றவாறே வாழப்போகிறாம்,த ிருமணம் முடிக்காது துறவறம் போகிறோம் என்ற போது இறை தூதர் சொன்னார்கள்:இது போன்ற குதர்க்கங்ளுக்க ும் இஸ்லாத்திற்கும் ஒரு சமபந்தமுமில்லை. திருமணம் எனது வழிமுறை;யார் அதை மறுப்பாரோ அவர் நான் காட்டிய வழியை விட்டு நீங்கியவர் ஆவார்.
ஆம்!இஸ்லாத்தில் கடவுள் கோட்ப்பாடு என்பது அன்றாட நடைமுறையை சார்ந்தது.அதில் இழைக்கப்படும் ஒவ்வொரு குறைக்கும் அநீதிக்கும் இஸ்லாம் தண்டனை வகுத்துள்ளது.அத ு உலகிலே வழங்கப்படும்.அத ற்கான சமுகத்தை கட்டமைக்கிறது இஸ்லாம்....சமுக ம் சார்ந்த அரசுகளை உருவாக்குகிறது. ....அரசுகளின் விரிவாக உலகளாவிய சர்வ தேச கிலாபத் எனும் இஸ்லாமியா ஆட்சி முறையை நிறுவுகிறது.
மனித சமுகம் சார்ந்து உருவாக்கப்படும் அரசுகளுக்கு முந்தைய சூழல்,ஒவ்வொரு தனிமனிதனும் பொறுப்புள்ளவனாக வேண்டும்.தன்னளவ ில் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு,தன் குடும்ப அளவில்,தான் சார்ந்துள்ள சமுக அளவில்,தன்னை சுற்றியுள்ள உலகளாவிய மனித சமுக அளவில் அவனுடைய பொறுப்பு என நிறைவேற்ற பொறுப்புகள் பல உள்ளது.அதில் அவன் யாருக்கு கடமையுடையவன் என்கிற கேள்வி எழும் போது தான்....அய்யா முதல் அனைத்து நல்லுள்ளம் கொண்டவர்களும் தடுமாறுகிறார்கள ்.
இஸ்லாம்,உலகைப் படைத்த மனிதர்களைப்படைத ்த இறைவனின் மார்க்கம்.மனிதன ் தன் மீதுள்ள பொறுப்புகளை தன்னைப் படைத்த இறைவனுக்கு கட்டுப்பட்டு நிறைவேற்ற கடமையுடையவன் என்பதை,இஸ்லாம், வாழ்க்கையாக வகுத்தளிக்கிறது .
வாழ்வும் மரணமும் வெறும் நிகழ்வுகளோ சுழற்ச்சியோ அல்ல;மனிதனுக்கு வழங்கப்பட்டிருக ்கும் வாய்ப்பு;அவனின் படைப்பிற்க்கான இலக்கு.தனது மரணத்திற்கு பிறகு தன்னைப் படைத்த இறைவன் முன்னிலையில் நிற்கவுள்ளோம்.. ..அந்நாள் வருவதில் எவ்வித சந்தேகமுமில்லை. அந்நாளில் குற்றவாளிகள் எவ்வித சாக்கு போக்குகளையும் சொல்லி தப்ப முடியாது;இறைவன் எல்லாம் அறிந்தவன்....ஏக ாந்தமானவன்..... ..எல்லா ஆற்றலும் அதிகாரமும் கொண்டவன்.அவன் அனுமதியின்றி எதுவும் இவ்வுலகிலும் நடை பெறவில்லை நாளை நிறுவப்படும் நீதி மன்ற நாளிலும் எதுவும் நடை பெறாது என உறுதியாக நம்பும் நம்பிக்கையின் அடிப்படையிலான வாழ்வியல் தத்துவதை இஸ்லாம் வகுத்துள்ளது.
கடவுளை சில அற்ப சந்தோஷங்களுக்கு ட்ப்படுத்தி காரியங்கள் சாதிக்கலாம் எனக் கூறும் எல்லா கையமைத் தனங்களுக்கும் எதிரானது இஸ்லாம்.ட்
இஸ்லாம் கூறும் மறுமைக் கோட்ப்பாடு கற்பனை அல்ல;மனிதர்களுக ்கான பாதுகாப்பு.பல சமுகங்கள் வாழ்க்கையில் ஏற்ப்படும் இழப்புகளால் துவண்டு வீழும் வரலாற்று பக்கங்களாக மாறும் அவல கால
சூழலில் இஸ்லாமும் முஸ்லிம்களும் புதிய அவதாரங்களாய் பவனி வர காரணம் மறுமைக் கோட்ப்பாடே!
இறைவன் அருளாளன்,பெரும் மன்னிப்பாளன் என அய்யாவிடம் இஸ்லாம் பற்றியும் அவரைப் படைத்த இறைவன் பற்றியும் சொல்ல அன்று தமிழகத்தில் ஆளில்லாமல் போனதே எனும் கவலை இதை எழுதும் இந்த தருணத்திலும் உள்ளது.
சம கால நிலவரமும் அதன் புள்ளி விவரமும் அறியாத ஒருவன் அல் குர் ஆன் பற்றி பேசினால்.......
சவுதியின் மொத்த மக்கள் தொகை 27 மில்லியன்.இதில் 25 மில்லியன் முஸ்லிம்கள்;மீத முள்ள 2 மில்லியன் அதாவது 20 லட்சம் வெளி நாட்டை சேர்ந்த பிழைப்பிற்காக சவுதியிலுள்ள காபிர்கள்..அக்க ாபிர்களை ஒரு நாடு கொடுமை செய்தால் அடிமையாக்கினால் அது பெரும் சர்வதேச பிரச்சனையாக உருவெடுக்காதா?அ மெரிக்காவின் கிறித்தவர்களும் ,ஈரோப்பின் கிறித்தவர்களும் ,சீனாவின் பவுத்தர்களும் காபிர்களே!இந்தி யா தன் நாட்டு பிரஜைகளை காக்காது எனும் சாணக்கியனின் கூற்றை அப்படியே உண்மை என நம்பினாலும் பிற நாடுகள் அப்படி அல்லவே!அதிலும் அமெரிக்கா,ஈரோப் ,சீனா அப்படி அல்லவே.இந்நாட்ட ு மக்கள் 2 மில்லியனில் சரி பாதியுள்ளனரே!பொ ய் சொல்லும் போக்கிலிகளே!... ...பொய் சொல்லுங்கள்.... பொருந்தும் படி சொல்லுங்கள்...இ ல்லையேல் உலகம் கை கொட்டி சிரிக்கும்.சாணக ்கியனுக்கு அதைப் பற்றி என்ன கவலை என்கிறீரா?ஆம்!ச ண்டாளன் சாணக்கியனுக்கும ் மானம் மரியாதைக்கும் என்ன சம்பந்தம்,தொடர் பு.
பாகிஸ்தானையும், 55 நாடுகளையும் முஸ்லிம்கள் உருவாக்கவில்லை. முஸ்லிம்கள் உருவாக்கிய அகண்ட பாரதத்தையும் ஆசியா ஆப்ரிக்கா அமெரிக்கா ஐரோப்பா என பரந்து விரிந்திருந்த இஸ்லாமிய பேரரசை சதிகளால் வீழ்த்திய கயவர்கள் காலி செய்து போயுள்ள நாடும் நகரம் தான் தற்பொழுது இஸ்லாமிய நாடுகளாயுள்ளது. உண்மையான இஸ்லாமிய பேரரசு முழு உலகமும் இஸ்லாத்தின் கீழ் வரும் நாளில் தான் நிறைவேறும்.இஸ்ல ாமிய பேரரசு மனித குல விடுதலைக்கான மானுட அரசு.அங்கு ஜாட்திகளிருக்கா து,சிலைகளிலிருக ்காது,அவதாரங்கள ் கிடையாது,சுரண்ட ல் மோசடி கிடையாது,ஒழுக்க சீரழிவிருக்காது ,சக மனிதனை அழித்து அதன் மீது இராஜ்யம் காணும் அயோக்கிய தனமிருக்காது மொத்தத்தில் மனிதன் எந்நிலையிலும் மிருகமாய் உருமாறும் கொடுமை இருக்காது.மனிதன ் மனிதனாக வழும் சுதந்திரம் சுக போகமிருக்கும்.அ ங்கு சாணக்கியனின் பொய்யுக்கு வரவேற்பிருக்காத ு...தண்டனை இருக்கும்.
RSS feed for comments to this post