கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: வரலாற்றுத் துணுக்குகள்
பைசா கோபுரம்
இத்தாலியில் உள்ள பைசா கோபுரத்திற்கு இப்போது வயது 700 ஆகும். அது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோபுரம். அது கட்டிய நாளிலிருந்தே அதன் புவி ஈர்ப்பு ஸ்தாபனத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்தது. அதாவது மில்லி மீட்டராக சாய்ந்து கொண்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இரண்டு மில்லி மீட்டர் மேலும் சாய்ந்தது. இப்போது அது கீழே சாயும் ஆபத்தில் உள்ளது. அதை சரிசெய்யும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
‘காணி’ நிலத்தை வச்சு
காலமெல்லாம் பாடுபட்டேன் - என்
கஷ்டமெல்லாம் தீரவில்லை
கடனுங் கூட அடையவில்லை…
உர விலையும் ஏறிப்போச்சு,
உழவு கூலி ஏறிப்போச்சு
உழுத கணக்கு பார்க்கையில,
உழக்கு கூட மிஞ்சலையே!....
வட்டிக்கு பணம் வாங்கி,
வயலுக்கு உரமும் போட்டேன்,
‘விதி’யும் சதி பன்ன
‘வெள்ளை நோய்’ பட்டதய்யா!..... .
‘கரண்டு’ பஞ்சமுன்னு,
கவருமெண்டு சொன்னதால,
ராத்திரி தூங்காம
நீர் பாய்ச்ச நான் போனேன்……
பாதையோரம் ‘பாம்பு’ ஒன்னு படுத்து உறங்குதய்யா!... ....
வரப்போரம் தேள் ஒன்னு வழிமறிச்சு நிக்குதய்யா!... ...
ஐப்பசி மாசத்தில அடைமழையும் வந்ததால……
அடியோடு வெள்ளத்துல அத்தனையும் சாய்ந்ததய்யா……
நெல்லும் வெளஞ்சாச்சு,
அறுவடையும் முடிஞ்சாச்சு……
கவருமெண்டு கமிட்டியின்னு
‘கனவோடு’ கொண்டு போனேன்….
‘ஆயிரம்’ போகுமுன்னு அடிமனசு சொன்னதால,
ஆசையோடு நானிருந்தேன்……. .
அடிமாட்டு விலை போல,
‘ஐந்நூறு’ சொன்னாங்க…..!
ஆத்திரமும் வருதய்யா……!
கண்ணில் நீர் பெருகுதய்யா….!
வாங்கின கடனுக்கு ‘வட்டி’ கட்ட வேணுமய்யா!
விதியேன்னு நினைச்சுக்கிட்ட ு,
வந்த விலை வித்துப்புட்டேன ்…….
விளையவச்ச பொருளுக்கு – நாங்க
‘விலை’ சொல்லும் நாள் வருமா……….?
- கவிஞர். நா.’பாரதி’கிருஷ ்ணன்.
RSS feed for comments to this post