1995ல் நடைபெற்றது அந்த விபத்து.
ஒரு பெரிய லாரிவிபத்தில் பெங் ஷுலினின் உடல் இரண்டு துண்டுகளாகிப் போனது. ஆனால் அந்த மனிதர் உயிர்பிழைத்து டாக்டர்களையே அதிசயப்படுத்தினார். விந்தை நிகழ்வு இத்துடன் நின்றுபோகவில்லை. அந்த “அரை” மனிதர் இப்போது நடக்கத் தொடங்கிவிட்டார்!
20 டாக்டர்கள் தங்களுடைய சலிப்பறியா உழைப்பைக் கொடுத்து பெங் ஷுலினின் உயிரைக் காப்பாற்றினார்கள்.
வெட்டுப்பட்ட கீழுடலை காப்பாற்ற முடியாமல் போனது. பெங் ஷுலினுக்கு மிஞ்சிய உயரம் வெறும் 78 செண்டிமீட்டர்கள்தான். துண்டிக்கப்பாட்ட உடல்பகுதியை மூடுவதற்காக தலைப்பகுதியில் இருந்து தோல் வெட்டி எடுக்கப்பட்டது.
ஆண்டுக்கணக்கில் படுக்கையில் இருந்துவிட்டார் பெங் ஷுலின். ஆனால் சீன டாக்டர்கள் இன்னும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். பெங் ஷுலினுக்கு சாதாரண வாழ்க்கையை கொடுத்துவிட முடியும் என்கிற நம்பிக்கைதான் அது.
கைகளுக்குப் பயிற்சியளித்து வலிமையேற்றிக் கொண்டார் பெங். இப்போது அவரால் முகத்தைக் கழுவிக்கொள்ளவும், பல்துலக்கவும் முடியும்.
பெய்ஜிங்கில் உள்ள சீன புனர்வாழ்வு ஆய்வு மைய மருத்துவர்கள் பெங்கின் முயற்சியால் உற்சாகமடைந்திருக்கிறார்கள். அவரை மீண்டும் நடக்க வைக்க இப்போது முயற்சிகள் தொடங்கியுள்ளன.
முட்டையின் ஓடு போன்ற ஒரு அமைப்பை டாக்டர்கள் உருவாக்கியிருக்கின்றனர். இந்த அமைப்பு அவருடைய உடலை தாங்கிப்பிடித்துக் கொள்கிறது. கிண்ணப்பகுதியில் அமைந்த செயற்கைக் கால்களின் உதவியால் மருத்துவமனையின் உட்புறம் தன்னுடைய முதல் சில அடிகளை பெங் எடுத்து வைத்துவிட்டார்.
தகவல்: மு.குருமூர்த்தி
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தகவல் - பொது