தேவையான பொருட்கள்:

பட்டன் காளான் - 15
கடலை மாவு - 100 கிராம்
சோளமாவு - 1 டேபிள் ஸ்பூன்
அரிசிமாவு - 1 டேபிள் ஸ்பூன்
மைதா - 1 டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
தேவைக்கேற்ப உப்பு, எண்ணெய் எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை:

காளானை சுத்தம் செய்து கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். காளானை ஒவ்வொன்றாக அதில் நனைத்து எடுத்து எண்ணையில் பொரித்து எடுக்க சுவையான பஜ்ஜி ரெடி.

காலிஃப்ளவரையும் துண்டுகளாக்கி உப்பு நீரில் சுத்தம் செய்து, அரை வேக்காடாக வேக வைத்து, நீரை வடித்து விட்டு, இதேபோல் கடலைமாவு கலவையில் நனைத்து பஜ்ஜி செய்யலாம். காளானில் உள்ள தாது உப்பு, புரதமும் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவைகளும் முக்கியமானதாகும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.