தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி - 250 கிராம்
முட்டை - 6
குடை மிளகாய் - 2
கோஸ் - 50 கிராம்
நெய் - 1 மேசைக் கரண்டி
வெங்காயம் - 50 கிராம்
கேரட் - 50 கிராம்
கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முட்டையை எடுத்து அதனுடன் மிளகுத் தூள், உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, நெய் போட்டு காய்ந்ததும் முட்டை கலவையை தோசை போல் ஊற்ற வேண்டும்.
இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை விரல் நீள அகலத்திற்கு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். கேரட், கோஸ், குடமிளகாய் ஆகியவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், கொத்துமல்லியை பொடியாக நறுக்க வேண்டும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் நெய்யை ஊற்றி கேரட், கோஸ், குடமிளகாய் போட்டு புரட்ட வேண்டும். நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வேகவைத்த அரிசி சாதத்துடன் வதக்கி எடுத்ததையும், ஆம்லேட் துண்டுகளையும் சேர்த்து மெதுவாக கிளறி மூடி வைக்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து சூடான ஆம்லேட் அரிசியை பறிமாறலாம்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: கோழி