தேவையான பொருட்கள்: மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகு, சீரகம், மல்லி இவற்றை அம்மியில் வைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மசாலாக்களை கழுவிய மீன் துண்டுகள் மீது தடவ வேண்டும்.
மீன் - அரை கிலோ
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
நெய் - 50 கிராம்
மிளகாய் தூள் - அரைக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
பூண்டு - 1
பச்சைமிளகாய் - 4
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 4
சீரகம் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிதளவு
தயிர் - ஒரு ஆழாக்கு
செய்முறை:
பாத்திரத்தில் நெய் விட்டு வெங்காயத் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மீதி நெய்யை கடாயில் ஊற்றி காய்ந்ததும் மீனைப் போட்டு பொரிய விட வேண்டும். பின்னர் அதில் தக்காளி, பச்சைமிளகாய், தயிர், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து கொதிக்கவிட வேண்டும். பச்சை வாசனை மாறியதும் பொரித்து வைத்திருக்கும் வெங்காயத்தை மீன் மீது போட்டு சற்று நேரம் அனலில் வைத்து இறக்க வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: மீன்