தேவையான பொருட்கள்: மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகு, சீரகம், மல்லி இவற்றை அம்மியில் வைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மசாலாக்களை கழுவிய மீன் துண்டுகள் மீது தடவ வேண்டும்.
மீன் - அரை கிலோ
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
நெய் - 50 கிராம்
மிளகாய் தூள் - அரைக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
பூண்டு - 1
பச்சைமிளகாய் - 4
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 4
சீரகம் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிதளவு
தயிர் - ஒரு ஆழாக்கு
செய்முறை:
பாத்திரத்தில் நெய் விட்டு வெங்காயத் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மீதி நெய்யை கடாயில் ஊற்றி காய்ந்ததும் மீனைப் போட்டு பொரிய விட வேண்டும். பின்னர் அதில் தக்காளி, பச்சைமிளகாய், தயிர், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து கொதிக்கவிட வேண்டும். பச்சை வாசனை மாறியதும் பொரித்து வைத்திருக்கும் வெங்காயத்தை மீன் மீது போட்டு சற்று நேரம் அனலில் வைத்து இறக்க வேண்டும்.
மீன் குருமா
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.