தேவையான பொருட்கள்: காய்கறிகளைக் கழுவி, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை இடித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், தேங்காய்த்துருவல், புதினா ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
புதினா - 2 கட்டு (இலைகளை தனியாக எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும்)
புலவ் அரிசி - அரை கிலோ
தேங்காய் - 1 மூடி
வெங்காயம்(பெரியது) - 4
காய்கறிகள் : கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிப்ளவர், பச்சைப்பட்டாணி, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் தேவையான அளவு
செய்முறை:
பிறகு வாணலியில் வெண்ணைய் போட்டு காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். அதனுடன் 2 கீறிய பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள புதினாவை போட்டு வதக்கி அதனுடன் காய்கறிகள், உப்பு, மஞ்சள் சேர்த்து நீர் ஊற்றி வேகவிடவும். இந்தக் கலவை கொதித்ததும் அரிசியை போட்டு வெந்ததும் இறக்கவும். புலாவ் ரெடி.
புதினா புலவ்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.