தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - அரை கிலோ
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
கடலைமாவு - 2 தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் - ஒரு மூடி
தனியாதூள் - கால் தேக்கரண்டி
சீரகத் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி 

செய்முறை:

வெண்டைக்காயை கழுவி விட்டு மேல் நுனிப் பகுதியை நறுக்கி விட்டு நான்காகக் கீறி வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் வெண்டைக்காயை போட்டு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாதூள், சீரகத் தூள், உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்து ஊற வைக்க வேண்டும். கடலை மாவை வெண்டைக்காய் கலவையில் தூவி பிசறி வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்டைக்காயை போட்டு மொறு மொறுப்பாக பொரித்து எடுக்க வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.