தேவையான பொருட்கள்:

அரிசி _- அரைக்கிலோ
துவரம் பருப்பு – கால் லிட்டர்
நெய் - 4 மேஜைக்கரண்டி
எண்ணெய் - 125 மி.லி.
வெந்தயம் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - சிறு துண்டு
தனியா - 2 மேஜைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - சிறு துண்டு
பச்சை மிளகாய் – 7
புளி – தேவையான அளவு 

செய்முறை:

மிளகாய், வெந்தயம், தனியா ஆகிவற்றை எண்ணெயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி பொன் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இவை எல்லாவற்றையும் இடித்து பொடி செய்து கொள்ளவும். பருப்பை அரை லிட்டர் நீரில் மஞ்சள் பொடி கலந்து வேகவிடவும்.

நன்றாக பருப்பு வெந்ததும் மூன்று லிட்டர் நீர் விடவும். அதனுடன் அரிசியைப் போட்டு வேகவிடவும். அரிசியும் பருப்பும் நன்றாக வெந்து பொங்கல் போல் வரும் சமயத்தில் புளியைக் கரைத்து அதில் ஊற்றி நன்றாகக் கிளறவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் போடவும். கடுகு வெடிக்கும்போது அதை பருப்பு சாதத்துடன் கலந்து நன்றாகக் கிளறவும். பின்னர் சாதத்துடன் வறுத்துப் பொடித்த மிளகாய் வற்றல், வெந்தயம், மசாலாப் பொடி, தனியா ஆகியவற்றைப் போட்டு, மறுபடியும் சிறிது புளியைக் கரைத்து ஊற்றவும்.

இதனுடன் கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கொள்ளவும். இந்த சாதத்தை சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்தால் பருப்பு சாதம் கெட்டியாகி விடவும்.

Pin It