சென்ற மார்ச் மாதம் 2 ஆம் தேதி நமது பூமி பெரிய விண்வெளி விபத்திலிருந்து பிழைத்தது. 35 மீட்டர் குறுக்களவுள்ள விண்கல் பூமியின் பாதையில் குறுக்கிட்டுச்சென்றது. மேலும் 72,000 கி,மீ நெருங்கி வந்திருந்தால், 1908 இல் சைபீரியாவில் ஏற்பட்ட துங்குஸ்க்கா விண்கல் மோதல் அளவுக்கு பாதிப்பு நிகழ்ந்திருக்கும்.

கல்லின் பெயர் 2009 45, வேகம் பூமியின் சார்பில் வினாடிக்கு 8.82 கி.மீட்டர். மோதலின் அதிர்வு 15 மெகா டன் வெடிமருந்துக்குச் சமம். அடுத்து 2067 இல் இது பூமியைக் குறுக்கிடலாம். இதுவரை சுமார் 6043 விண்கற்கள் பூமியை நெருங்கிவந்து பயமுறுத்திவிட்டுச் சென்றிருக்கின்றன. 58 ஆண்டுக்கப்பால் மறுபடியும் 2009 45 திரும்பிவரும்போதும் பூமி பிழைத்துக்கொள்ளும் அதற்கப்புறம் எப்படி என்பது இயற்கைக்கே வெளிச்சம்.

- முனைவர் க.மணி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.