ஜோத்பூரில் பாலைவன மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் சார்பில் சமீபத்தில் உப்பளத் தொழிலாளர்களிடையே ரத்த அழுத்தம் குறித்த ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. உப்பளங்களில் உப்புத் துகள்களை மிகவும் நெருக்கமாக சுவாசிக்கும் தொழிலாளர்களுக்கு ரத்த அழுத்த நோய் மிகுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கின்றன என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
உப்பளங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவினர் உப்புத்துகள்களை நெருக்கமாக நுகரும் பணிகளில் அமர்த்தப்பட்டனர். மற்றொரு பிரிவினர் உப்புத் துகள்களை சற்றே தூரத்தில் கையாளும் பணிகளில் அமர்த்தப்பட்டனர். முதல் பிரிவினருக்கு சில நாட்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் ரத்த அழுத்தம் மிகுந்து இருப்பது கண்டறியப்பட்டது.
இதுவரை மிகுந்த ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உப்பை உணவில் குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றது. ஆனால் சுவாச மண்டலத்தில் செல்லும் உப்புக்காற்று ரத்தத்துடன் கலந்து மிக ரத்த அழுத்தத்தை உருவாக்கும் என்பது நவீன விஷயமாகும். இது தவிர பாதிக்கப்பட்ட உப்பைத் தொழிலாளர்களுக்கு இருதயம் மற்றம் இரத்தக் குழாய் நோய்கள் (கார்டியோ வாஸ்குலார் நோய்கள்- cardio vascular) மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
எனவே உப்பளத் தொழிலாளர்கள் முகமூடிகள் அணிந்தோ, பிளாஸ்டிக்கினால் ஆன கண்ணாடிகளை பயன்படுத்தியோ உப்புத்துகள்கள் நிறைந்த காற்றை சுவாசிப்பதை குறைத்துக் கொள்ளலாம் என பரிந்துரை செய்யப்படுகின்றது. உப்பளத் தொழிலாளர்களுக்கு முதல் கட்ட ரத்தக் கொதிப்பு நிலை தோன்றிய உடனேயே விரைவிலேயே இரண்டாம் கட்ட நிலை தோன்றுவதற்கான அறிகுறிகள் தோன்றிவிடுகின்றன. எனவே உப்பளத் தொழிலாளர்கள் முறையான ரத்த அழுத்த பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்
தொடர்புடைய படைப்புகள்
உப்புக் காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு...
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: இதயம் & இரத்தம்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.