காலனி ஆதிக்கச் சக்திகளிடமிருந்து பல ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகள் 20ஆம் நூற்றாண்டில் விடுதலை பெற்றன. பல நாடுகள் இன்னும் பல காலனிய மாயைகளிலிருந்து விடுதலை பெறவில்லை. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, வெள்ளையர்களால் ஊக்குவிக்கப்பட்ட விளையாட்டுத்தான் மட்டைப்பந்து என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியத் துணைக்கண்டம் பிரித்தானிய காலனி நாடாயிருந்த போது, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், பர்மா, இலங்கை போன்ற நாடுகள் ஒரே நாடாகயிருந்தன என்பதை அண்மைக்கால வரலாறு நமக்குச் சுட்டுகிறது.

விருது வழங்குவதிலும், அதிலும் குறிப்பாக உயரிய விருதுகள் வழங்குவதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகள் ஒரே வழியைத்தான் கடைப்பிடித்து வருகின்றன. இந்த உயரிய விருதுகள் புவிசார் அரசியல் அடிப்படையிலும் (Geo-politics) மேற்கூறிய நாடுகளில் வழங்கப்படு கின்றன என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்த இலங்கை அரசின் ‘இலங்கா ரத்னா’ விருதினை ‘இந்து’ ராம் உட்படப் பல இந்தியர்கள் பெற்றுப் பரவசம் அடைந்தனர். இலங்கை பாசிசத்திற்கு ‘ஜனநாயக’த் தங்க முலாம் பூசி மகிழ்ந்தனர்.

இங்கிலாந்தின் ஊடக ஒளிக்காட்சி 4 - இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனப் படுகொலையை, போர்க் குற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய பிறகு, இந்தப் ‘பன்னாட்டு தேசியவாதிகளின்’ முகங்கள் இருண்டு போயின. அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி, 2012 பிப்ரவரி திங்கள் 11ஆம் நாள் புது தில்லியில் செய்தி ஏட்டாளர்களை நேரில் சந்தித்த போது கொடுங்கோலன்’ இராஜபக்சேவுக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்று நடுவண் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

2011ஆம் ஆண்டு வங்கதேசம் விடுதலை பெற்று 40ஆம் ஆண்டு விழாவை அந்நாடு கொண்டாடியபோது, வங்கதேசத்தின் உயரிய ‘எக்சே பதக்’ (Ekusney Padak Award) விருதினை மறைந்த இந்திரா காந்திக்கு வழங்கினார்கள். இந்திரா காந்தி குடும்பத்தின் சார்பில் சோனியா இவ்விருதினைப் பெற்றார். சோனியாவை மகிழ்விப்பதற்காக இராஜபக்சே இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவ்வாறாக விருதுக்கு முன்னும் பின்னும் பல அரசியல் பின்னணிகள் கைக்கோத்துக் கொண்டு நிற்கின்றன.

2013 நவம்பர் மாதம் நடுவண் அரசு இரண்டு இரத்தினங்களைக் கண்டுபிடித்தது. அறிவியல் இரத்தினமான அறிவியல் அறிஞர் ராîக்கு வயது 80. விளையாட்டு இரத்தினமான சச்சினுக்கு வயது 40. ‘இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்’ என்ற ‘முட்டாள் புகழ்’ ராகுலின் முழக்கம் ரத்தினமாக வெளிப்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த முட்டாள் அரசியல் சொல்லாக்கம் நேருவின் அசல் கண்டுபிடிப்பாகும். 1950களில் பெரியாரை Nonsense என்று அவர் குறிப்பிட்டபோது ‘பிரதமர் நேருவே அதிர்ந்து போகும் அளவிற்கு அறிஞர் அண்ணா தலைமையில் திமுக ‘நேருவே திரும்பிப்போ’ என்று கறுப்புக் கொடி போராட்டம் நடத்தியதைப் பலரும் அறிந்திருக்கலாம். நேருகும் ராகுலுகும் ஒரே ஒரு வேறுபாடு உள்ளது.

தந்தை பெரியாரோ காங்கிரசிலிருந்து வெளியேறிஇ காங்கிரசுக் கட்சியின் பிற்போக்குக் கருத்துகளைக் கடுமையாகச் சாடிய திராவிடர் கழகத்தின் தலைவர். தண்டனை பெற்றுச் சிறையிலிருக்கும், அரசியல்வாதிகளின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகளை உடனடியாகப் பறித்துவிட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் வலியுறுத்தியது. இதற்கு எதிராக, அரசியல்வாதிகள் பதவியில் நீடிக்கலாம் என்று நடுவண் அரசின் அமைச்சரவை முடிவு எடுத்து, சட்டத்திருத்தத்தை மேற்கொண்டது. இதில் சோனியாகு, மன்மோகன் சிங்குக்கும் பொறுப்புண்டு.

மேலும் மன்மோகன் சிங் ராகுல் துணைத் தலைவராக இருக்கும் காங்கிரசு கட்சியின் பிரதமர். இதையெல்லாம் உணராமல் Nonsense என்று காங்கிரசு கட்சியின் முடிவை ராகுல் குறிப்பிட்டார்.

எனவேதான் ரத்தினம் பட்ட அறிவிப்பு வந்தவுடன் ‘அரசியல்வாதிகள் முட்டாள்கள்’ என்ற அறிவியல் அறிஞர் ராவ் வெளியிட்டார். பின்னர் நான் அரசியல் தலைவர்களை Idiot என்று குறிப்பிடவில்லை, Idiot என்று குறிப்பிட்டேன் என்று மறுப்புரை வழங்கினார் ராவ். ‘முட்டாள்தன’க் கூத்துடன் தொடங்கிய ரத்தின பட்டத்தின் வரலாற்றினைத் திரும்பிப் பார்த்தால் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.

ரத்தின விருதினை 1954ஆம் ஆண்டு ராஜகோபாலச் சாரியாருக்கு வழங்கினார்கள். 1952ஆம் ஆண்டில் பொதுவுடைமைக் கட்சிகளை ஒழிப்பேன் என்று முழங்கி சென்னை மாகாண முதல்வர் ஆனார். குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்த முயன்று தோல்வி அடைந்த பின் 1954ஆம் ஆண்டு பதவி விலகினார். ‘ரத்தினப் பட்டம்’ வருணாசிரம முறையை அறிமுகப்படுத்தியதற் காக வழங்கப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது.

1954ஆம் ஆண்டு சர் சி.வி.ராமன் என்ற இயற்பியல் அறிஞருக்கு இப்பட்டம் வழங்கப்பட்டது. முதல் தகுதி மாபெரும் இயற்பியல் அறிஞர். இரண்டாவது தகுதி தமிழ்நாட்டு அய்யர். அய்யாங்காருக்கு வழங்கிவிட்டுஇ அய்யரை எப்படி விட்டுவிடலாம் என்று தேடிப்பிடித்துக் கொடுத்திருக்கலாம். மூன்றாவது நபர் 1954இல் ரத்னா தகுதியைப் பெற்றவர், ஆந்திரப் பார்ப்பனர், வேதாந்த மெய்யியல் அறிஞர் சர்வப்பள்ளி ராதாகிருணுணன்.

1955ஆம் ஆண்டு மூவருக்கு ரத்தின விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியாவின் முதல் பிரதமர் (காணுமீர் பார்ப்பனர்) நேருவுக்கு வழங்கப்பட்டது. எல்லாத் தகுதிகளும் ஒருங்கே அமையப் பெற்றவர் அவர் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. இரண்டாவது ரத்தினத்தைப் பெற்றவர் சர் மோட்ச குண்டம் விசுவேசுவரய்யா, ஆசியாவின் முதல் நீர்மின் உற்பத்தி அணையை அமைத்த பொறியியல் அறிஞர்.

எல்லாத் தகுதிகளோடும் பார்ப்பனத் தகுதியும் இவருக்கு இருந்தது என்பதுதான் உண்மை. ரத்தின விருதினைப் பெற்ற மூன்றாவது நபர் பகவான் தாசு. உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சார்ந்தவர். விடுதலைப் போராட்ட வீரர். சமஸ்கிருதம், இந்தியில் பல நூல்களை எழுதியவர். இந்தி மொழி ஒன்று மட்டும்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று இறுதி வரை வாதாடியவர். 1956ஆம் ஆண்டு இந்தியாî¡கு நல்ல நேரம். யாருக்கும் ரத்தினம் கிடைக்கவில்லை.

1957ஆம் ஆண்டு மீண்டும் உத்திரப்பிரதேச மாநிலத்துக்;கு ரத்தினம் சென்றது. பெற்றவர் நேரு அமைச்சரவையில் இடம் பெற்ற கோவிந்த வல்லப் பந்த். இந்தியை ஆட்சி மொழியாக்குவதில் இவர் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது என்று தமிழ் இந்து நாளிதழ் பெருமிதம் கொண்டுள்ளது. ராணுவத்துக்கு ஜீப் வாங்கியதில் ஊழல் என்று எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இவர்  பேரில்  குற்றம் சாட்டினார்கள். அனந்தசயம் அய்யங்கார் விசாரணைக்குழு (1951) நீதிபதியைக் கொண்ட விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று பரிந்துரையை வழங்கியது. நீதிபதி விசாரணை தேவையில்லை. எதிர்க்கட்சிகள் தேர்தலில் இப்பிரச்சினையை முன்னிறுத்திஇ காங்கிரசுக் கட்சியைத் தோற்கடிக்க முயன்று பாருங்கள் என்று ஊழலுக்காக நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தவர் பந்த் ஆவார். உத்திரபிரதேசப் பார்ப்பனர் என்ற சிறப்புத் தகுதியும் இவருக்கு உண்டு.

1958ஆம் ஆண்டிலும் ஒருவருக்கு மட்டும்தான் ரத்தினம் விருது வழங்கப்பட்டது. மராட்டிய மாநிலத்தைச் சார்ந்த தோண்டோ கார்வே சமூக சீர்த்திருத்தவாதி என்று போற்றப்பட்டவர். சித்பவன் பார்ப்பன வகுப்பைச் சார்ந்தவர் என்ற சிறப்புத் தகுதியும் இவருடன் ஒட்டிப் பிறந்ததாகும். 1959-1960 ஆகிய இரண்டு ஆண்டுகள் ரத்தின விருதிலிருந்து தப்பித்துக் கொண்டன. 1961ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தைச் சார்ந்த மருத்துவ மாமேதை பி.சி.ராய்க்கு வழங்கப்பட்டது. விடுதலைப் போராட்ட வீரர்; மாநில உரிமைக்கு வாதாடியவர் என்ற பெருமையும் பெற்றவர். இவரும் வங்கப் பார்ப்பன வகுப்பைச் சார்ந்தவர். உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த புருNõhத்தம் தாஸ் தாண்டனுக்கு 1962இல் ரத்தினம் விருது வழங்கப்பட்டது. விடுதலைப் போராட்ட வீரர், அரசமைப்புச் சட்ட அவையில் இந்தி மொழி ஒன்றுதான் தேசிய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் இருக்க வேண்டும் என்று வாதிட்டவர். ïவ® சமஸ்கிருத மொழியை உயர்க்கல்வி மொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். ரத்தின விருது கொடுக்கத் தொடங்கி, 8 ஆண்டுகளுக்குப் பின்புதான், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத்துக்கு 1962ஆம் ஆண்டு ரத்தின விருது வழங்கப்பட்டது. இவருக்குப் பார்ப்பனர் என்ற சிறப்பத் தகுதி இல்லாதது காரணமாயிருக்கலாம். விருது பெற்ற அடுத்த ஆண்டிலேயே ராஜேந்திர பிரசாத் காலமானார்.

1963ஆம் ஆண்டு இருவருக்கு ரத்தின விருதுகள் வழங்கப்பட்டன. ஒருவர் பாண்டுரங்க வாமன் காணே. சமஸ்கிருத அறிஞர். தர்ம சாஸ்திரத்தின் வரலாற்றை வரைந்தவர். பண்டைய இந்தியாவில் மாட்டு இறைச்சியை மக்கள் உண்டனர். பெண்கள் பூணூல் அணிந்திருந்தனர் என்று முன்மொழிந்து பல கருத்து வேறுபாடுகளை ஆய்வுத் தளத்தில் உருவாக்கியவர். இவரும் சித்பவன் பார்ப்பனர் ஆவார். 1963ஆம் ஆண்டில் ரத்தின விருதினைப் பெற்றவர் நாட்டின் மூன்றாவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய ஜாகீர் உசேன் ஆவார். ஜாமியா மிலியா இசுலாமியப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய நிறுவனத் தலைவர்களில் ஒருவர். உயிரோடிருக்கும் போதே ரத்தின விருதைப் பெற்ற முதல் இசுலாமியக் கல்வியாளர். 1964இல் நேரு மறைந்தார். லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பேற்றார். 1964-65 ஆண்டுகளில் ரத்தின விருது வழங்கப்படவில்லை. 1966ஆம் ஆண்டு லால் பகதூர் மறைந்த பிறகு இவருக்கு ரத்தின விருது வழங்கப்பட்டது. பிறகு ரத்தின விருதுக்;கு 5 ஆண்டு கால விடுமுறை அறிவிக்கப்பட்டது எனலாம். 1971ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்திக்கு ரத்தின விருது வழங்கப்பட்டது. காணுமீர் பார்ப்பனர் என்ற சிறப்புத் தகுதியும் இவருக்கு இருந்தது.

1969இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் ‘மனச்சாட்சியின்படி’ காங்கிரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக உட்பட மற்ற கட்சியினர் அளித்த வாக்கினால் வெற்றி பெற்றவர் வி.வி.கிரி. தானே முன்மொʪத மூத்த காங்கிரசுக் கட்சித் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியைத் தோற்கடித்தவர். ஆந்திரப் பார்ப்பனர் என்ற சிறப்புத் தகுதியைப் பெற்றவர். இவருக்கு உயிரோடு இருக்கும்போது ரத்தின விருது வழங்கப்பட்டது. 1976ïš பெருந்தலைவர் காமராசர் மறைî¡குப் பிறகு ரத்தின விருது வழங்கப்பட்டது. நெருக்கடி நிலை அறிவிப்பால் பெரும் பாதிப்புக்கு உள்ளானவர். ïªâய விடுதலைப் போரில் ஒன்பது ஆண்டுகளுக்குமேல் சிறை சென்றவர். தன்னலமற்ற தன்மானத் தலைவர். 9 ஆண்டுகள் தமிழகத்தில் பொற் கால ஆட்சியை வழங்கியவர். இந்திரா காந்தியைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தவர். உயிரோடிருக்கும் போது இவருக்கு இந்த உயரிய விருதினை வழங்காமல் இருந்ததற்;குப் பல அறிவியல் காரணங்கள் இருந்தன. நான்கு ஆண்டுகள் யாருக்கும் ரத்தின விருது வழங்கப்படவில்லை.

1980இல் அல்பேனியா நாட்டைச் சார்ந்த கிருத்துவத் தொண்டரான அன்னை தெரசாவிற்கு வழங்கப்பட்டது. 1983இல் பூதான இயக்கத்தலைவர் வினோபாî¡கும் வழங்கப்பட்டது. இவரும் சித்பவன் (பார்ப்பனர்) என்ற சிறப்புத் தகுதியைப் பெற்றவர். 1982இல் இவர் காலமானார். 1987இல் எல்லை காந்தி என்று போற்றப் பட்ட கான் அப்துல் கபார் கானுக்கு வழங்கப்பட்டது. 1987இல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். காலமானார். மூன்று முறை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றி ருந்தார். இவர் மறைî¡;குப் பிறகு ஜானகி அணி என்றும், ஜெயலலிதா அணி என்றும் அதிமுக பிளவுபட்டது. ஜானகி அணிக்குக் காங்கிரசுக் கட்சி சட்டமன்றத்தில் எதிராக வாக்களித்து ஆட்சியைக் கவிழ்த்தது. சில மாதங்கள் முதல்வராக இருந்த ஜானகி முதல்வர் பதவியை இழந்த பிறகு, கணவர் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட விருதினைப் பெற்றார். விருது வழங்கிய பின்னர், 356ஆவது பிரிவில் மாநில ஆட்சியைக் கவிழ்த்து உச்சநீதி மன்றத்தின் கண்டனத்திற்கும் மத்திய அரசு உள்ளானது. குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் இந்த ரத்தின விருதினை ஜானகியிடம் வழங்கிய போது, அம்மையார் குடியரசுத் தலைவரைப் பார்த்து புன்னகை செய்யவில்லை என்று அந்நாளில் ஊடகங்களில் செய்திகள் வலம் வந்தன.

திமுக ஆட்சியை 1967இல் தோற்றுவித்த பேறிஞர் அண்ணாவிற்கு ரத்தின விருது வழங்காமல், எம்.ஜி.ஆரின் மறைî¡குப் பிறகு வழங்கியது அரசியலா? அல்லது அண்ணாவை விட எம்.ஜி.ஆர் ஆற்றிய தொண்டு உயர்ந்ததா? போன்ற வினாக்களுக்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

டெல்லி அரசியலில் 1989ïš பல மாற்றங்கள் ஏற்பட்டன. பாஜக உட்படப் பல எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு வி.பி.சிங் 1989 நவம்பர் திங்களில் பிரதமர் ஆனார். சமூக நீதிக் கொள்கையைப் பின்பற்றி நடுவண் அரசின் பதவிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு ஆணையைப் பிறப்பித்தார். பேரறிஞர் அம்பேத்கருக்கு நூற்றாண்டு விழா நடுவண் அரசின் சார்பில் எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அண்ணல் அம்பேத்கருக்கு ரத்தின விருது வழங்கப்பட்டது. விடுதலைப் போராட்டப் போராளி நெல்சன் மண்டேலாî¡கும் ரத்தின விருது வி.பி.சிங் ஆட்சியில்தான் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதைப் பொறுத்துக் கொள்ளாத ஆதிக்கச் சக்திகளின் ஊடக எழுத்தாளர்கள் இந்த இரு பெரும் ரத்தினங்களை விருது¡கு வி.பி.சிங் பரிந்துரை செய்ததற்கு அவர் மீது கண்டனக் கணைகளைத் தெரிவித்து வருகின்றனர்.

1991ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய்க்கும், மறைந்த பிரதமர் இராஜிவிற்கும், சர்தார் வல்லபாய் பட்டேலுக்கும் ரத்தின விருதுகள் வழங்கப்பட்டன. 1990ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய்க்கு பாகிஸ்தானின் உயரிய நி~hன்-இ-பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்ட பிறகே, இந்தியா ரத்தின விருதினை அறிவித்தது. குஜராத் பார்ப்பனர் என்ற தனித் தகுதியும் உண்டு. இந்தியாவின் துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர், காந்தியின் சீடர் என்ற பல தகுதிகளைப் பெற்ற வல்லபாய் பட்டேலுக்கு 1954இல் வழங்காத ரத்தின விருதை, 37 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கியது. இவர் பார்ப்பனர் வகுப்பில் பிறக்காதது காரணமாக இருக்குமோ என்ற ஐயம் எழுவது இயற்கைதானே.

1992ஆம் ஆண்டில் ரத்தன் டாடாஇ மறைந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத், மேற்குவங்கத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே ஆகியோருக்கு ரத்தின விருதுகள் வழங்கப்பட்டன. ரத்தன் டாட்டா உயிரோடு இருக்கும்போது அளிக்கப்பட்டது. முதன் முதலாக ஒரு பெரும் முதலாளிக்கு ரத்தின விருதினை நரசிம்மராவ் அரசு வழங்கியது. 1955ஆம் ஆண்டிலேயே ஆசாத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆசாத் ரத்தின தேர்வுக் குழுவில் இடம் பெற்று இருந்ததனால், அவ்விருதினைப் பெற மறுத்து விட்டார். இந்தப் பெருந்தன்மையை ஏற்று 1958ஆம் ஆண்டிலேயே ரத்தின விருதினை ஆசாதுக்கு வழங்கியிருக்கலாம். 36 ஆண்டுகள் தாமதித்து இந்த விருதினை வழங்கியது இன்று வரை புரியாத புதிராக உள்ளது. இயக்குநர் சத்யஜித் ரேî¡கு ரத்தின விருது அறிவிப்பதற்கு முன்பே 31 பன்னாட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 1967ஆம் ஆண்டு மகசேசே விருது வழங்கப்பட்டது. உலகப் புகழ் பெற்ற முற்போக்குக் கலைஞரான சார்லி சாப்லினுக்குப் பிறகு 1978இல் சத்யஜித் ரேî¡கு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முதுமுனைவர் பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது. 1991ஆம் ஆண்டு ஆஸ்கார் பரிசினை அறிவித்தார்கள். மருத்துவமனை யிலிருந்து இந்த விருதினை ரே பெற்றார். காணொளி வழியாக மருத்துவமனையிலிருந்து ஏற்புரையை நிகழ்த்தினார். இதற்குப் பின்புதான் மருத்துவமனையில் சத்யஜித் ரே நினைவு இழந்த பிறகு 1992ஆம் ஆண்டு மரணப் படுக்கையில் ரத்தின விருது வழங்கப்பட்டது. இவரும் வங்கப் பார்ப்பனர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை மறந்துவிட்டார்களோ.

மீண்டும் 5 ஆண்டுகள் ரத்தின விருது¡கு ஓய்வு வழங்கப்பட்டது. 1997ஆம் ஆண்டில் அப்துல் கலாம்இ விடுதலைப் பேராட்ட வீராங்கனை ஆருணா ஆசிப் அலி (மறைî¡குப் பிறகு) மேன்மையாளர் குல்சாரி நந்தாவிற்கு 99 வயதில் ரத்தின விருது வழங்கப்பட்டது. பார்ப்பனரல்லாதவர் என்பதால் இவருக்குத் தாமதமாக வழங்கப்பட்டிருக்கலாம்.

1998ஆம் ஆண்டில் சி.சுப்ரமணியம், இசைப் பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமி ஆகியோர்க்கு ரத்தின விருதுகள் வழங்கப்பட்டன. 1999இல் வாஜ்பாய் பிரதமாயிருந்த போது 1998இல் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்தியா சென், விடுதலைப் போராட்ட வீரர் அசாம் மாநிலத்தின் முதல் முதல்வர் கோபிநாத் போர்டோலாய் (மறைவுக்குப் பிறகு), சர்வோதயத் தலைவர் விடுதலைப் பேராட்ட வீரர் ஜெயப் பிரகாணு நாராயண் (மறைî¡குப் பின்) சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் (பார்ப்பனர்) ஆகியோர்க்கு ரத்தின விருதுகள் வழங்கப்பட்டன. 2001இல் லதா மங்கேணுகர், உஸ்தாத் பிஸ்மில்லாகான் ஆகிய கலைஞர்களுக்கு ரத்தின விருதுகள் அறிவிக் கப்பட்டுள்ளன.

1954இல் தொடங்கி 2013 ஆம் ஆண்டிலும் பார்ப்பனர் களான ராவ், சச்சினுக்கு வழங்கியதால், இந்திய மண்ணில் பார்ப்பனியம் ரத்தின செல்வாக்கோடு, செருக்கோடு வலம் வருகிறது என்பதுதான் உண்மை. சச்சின் வட மாநில ஏட்டில் தனது தாய் தூய பார்ப்பனர் (pure brahmin) என்று பெருமிதம் கொண்டார் என்பதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

தகுதி மிக்க, பொதுவாழ்î¡கு இலக்கணம் வகுத்த, தொண்டின் இலக்கியமாய் வாழ்ந்த பல இந்தியச் சாதனையாளர்களுக்கு ரத்தின விருதுகள் வழங்கப்படவில்லை. ஆனால் சச்சினுக்கு என்றே விதிகளை மாற்றிஇ ரத்தின விருது வழங்கியதைச் செய்தி ஒளி ஊடகங்கள் கண்டனம் தெரிவிப்பதற்குப் பதிலாக, இவரை விட்டால் இந்தியாவில் வேறு விளையாட்டு வீரர் இல்லை என்ற கருத்தை வெளியிடுவது வெட்கக்கேடான செயலாகும்.

காரணம் மட்டைப் பந்து விளையாட்டு முதலாளித்துவத்தின் பிடியில் சிக்கி, மக்களை மாயையில் ஆழ்த்தி, இளைஞர்களைப் போதையில் ஆழ்த்திச் சீரழித்து வருகிறது. மற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளை அடித்து நொறுக்கி வருகிறது. பல முதலாளிகள் உழைக்காமலேயே பணம் கொட்டும் தொழிலாக மட்டைப்பந்து விளையாட்டை மாற்றி வருகின்றனர். விளையாட்டு என்ற நிலையிலிருந்து தடுமாறி, ஊக வணிகத்திற்கும், சூதாட்டத்து¡கும், மோசடிக்கும் இருப்பிடமாக மட்டைப்பந்து விளையாட்டு மாறிவிட்டது என்பதற்கும் மும்பை நீதி மன்றத்தில் நடைபெறும் வழக்கே சான்று பகர்கின்றது.

இந்த விளையாட்டில் எவ்வளவுதான் திறமையான விளையாட்டு வீரராக சச்சின் இருந்தாலும், அவர் கோடிக்கணக்கான பணம் ஈட்டியுள்ளார். வரிவிலக்குப் பெற்ற பல கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்த வெளிநாட்டு மகிழுந்தை வணிக நோக்கோடு விற்றுவிட்டார் என்ற குற்றச்சாட்டும் சச்சின் மீது உள்ளது. இதுதான் பொது சேவை என்றால், விளையாட்டுத் திறமைக்கு உச்சம் என்றால், இதைவிட மானம் இழந்த செயல் வேறு ஒன்று இருக்க முடியாது.

பாரத ரத்னவா-பார்ப்ப ரத்னாவா என்ற ஐயமும் அச்சமும் எழுகின்ற இந்த வேளையில், தந்தை பெரியாரைப் புதிய தலைமுறை ஒளி ஊடகத்தில் பாஜகவின் தலைவர்களில் ஒருவர் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்தார். விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பக் காலத்தில் காங்கிரசு இயக்கத்தில் ஈடுபட்ட காரணத்தினால் 28 பதவிகளைத் துறந்தவர் தந்தை பெரியார். எந்தப் பட்டத்தையும், எந்த விருதினையும் விரும்பாத உலகம் போற்றும் மாபெரும் புரட்சியாளர். பெரியாருக்காகப் பெரியார் நெறிப்படி அவர் மறைî¡குப்பின் ரத்தின விருதை யாரும் கோரவில்லை என்பதை பாஜகவின் அந்தப் பாம்பு நபர் அறியாமையிலும் காழ்ப்புணர்ச்சியிலும் நச்சைக் கக்கினார்.

அண்டை நாடான பாகிஸ்தானில் உயரிய விருதினை வழங்கும் போது கடை¥பிடித்து வரும் உயரிய மரபு களை, நெறிகளைக்கூட இந்தியா ஏன் பின்பற்றவில்லை? என்பதைப் பலர் சுட்டியுள்ளனர்.

உண்மையான மக்கள் குடியரசாக இந்தியா வளர வேண்டுமென்றால், இது போன்ற விருதுகளை வழங்குவதைச் சட்டபூர்வமாகத் தடை செய்து விடலாமே!

Pin It