நீங்கள் திருநீறு பூசுவதாலேயே உங்களை யாரும் தீவிரவாதி என நினைப்பதில்லை. சிலுவை அணிவதாலேயே நீங்கள் பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படுவதில்லை. ஆனால் நீங்கள் தொப்பி அணிந்திருந்தால் மட்டும் போதும்… பயங்கரவாதியாகவும், தீவிரவாதியாகவும் சித்தரிக்கப்படுவதற்கான எல்லா சாத்தியங்களும் இங்கு இருக்கின்றன. இந்தியாவில் இஸ்லாமியனாக வாழ்வதென்பது துயர்மிகுந்த ஒன்று. சதா சர்வ நேரமும் தன்னை கண்காணிக்கும் அரசின் கண்களுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் எப்படி நிம்மதியாக வாழ இயலும்?
இந்த அரசும், ஊடகங்களும் ‘முஸ்லிம் என்றாலே உடம்புக்குள் நான்கைந்து குண்டுகளை கட்டிக்கொண்டுதான் அலைகிறான்’ என்பதான பிம்பங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. அவையே பொதுப்புத்தியை உற்பத்தி செய்கின்றன. அதனால்தான் ஒரு முஸ்லிம் சகோதரருக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது மிக சிக்கலானதாக இருக்கிறது. சென்னை மாதிரியான பெருநகரங்களில் மிக வெளிப்படையாகவே முஸ்லிம்களுக்கு வீடு மறுக்கப்படுகிறது.
நான்கைந்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும்போது, அதில் ஒரு முஸ்லிம் இருந்தால் ’நீ எல்லாம் உங்க ஆளுகளுக்குதான் சப்போர்ட் பண்ணுவ’ என்று மற்றவர்கள் கமெண்ட் அடிப்பதும், அது இயல்பான ஒன்றாக இருப்பதும் எத்தகையது?
அப்பாவி முஸ்லிம் மக்களை ஆயிரக்கணக்கில் கொலை செய்த இந்து தீவிரவாதிகள் மீதான பல்வேறு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படுவது இல்லை; முக்கிய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படுவதும் இல்லை. அப்படியே வழக்கு நடத்தி, தீர்ப்பு கொடுக்கப்பட்டாலும் அது அமுல்படுத்தப்படுவது இல்லை. ஆனால் முஸ்லிம் கைதிகள் மீதான வழக்குகள் மட்டும் அதிவேகமாக நடத்தப்பட்டு அதிவேகமாக தண்டனை வாங்கித்தரப்படுகிறது. பலர் விசாரணைகூட இல்லாமல் 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திண்ணியம் தொடங்கி கயர்லாஞ்சி வரை நாடெங்கும் இந்து அடிப்படைவாதத்தின் சாதி வெறிக்கு லட்சக்கணக்கான தலித் மக்கள் நாள்தோறும் பலியிடப்படுகின்றனர். இந்த சமூக அசிங்கங்களை கொஞ்சமும் கண்டுகொள்ளாத சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் முஸ்லிம்களின் சிறு தவறுகளையும் மிகைப்படுத்தி பூதாகரம் செய்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு 'தாலிபான் பிராண்ட் முஸ்லிம்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை' என்று தெனாவட்டாக எழுதியது இந்தியா டுடே. 'உன்னைப் போல் ஒருவன்' என்னும் கடந்த பத்தாண்டுகளின் மோசமான இஸ்லாம் காழ்ப்பு திரைப்படத்தை எடுத்துவிட்டு அதைப்பற்றிய எந்த குற்றவுணர்வுமின்றி உலக நாயகன் உலவுவதும் இந்தப் பின்னணியில்தான்.
இப்படி அனுதினமும் இந்திய சமூகம் முஸ்லிம்கள் மீது வெறுப்பையும், காழ்ப்பையும் உமிழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் இன்னமும் இதன் பெயர் மத சார்பற்ற நாடுதான். காவல் நிலையம் உள்பட எல்லா அரசு அலுவலகங்களிலும் பிள்ளையார் கோயில் முதல், பெருமாள் கோயில் வரை வழிபாட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையிலும் கூட இது மத சார்பற்ற நாடுதான். இந்த பெரும்பான்மைவாத பூதத்தின் அசிங்கமான பிடிக்கு இடையிலே முஸ்லிம்கள் அனுதினமும் தங்கள் தேசபக்தியை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. தங்கள் மீதான காழ்ப்பு மிகுந்த சொற்களை கண்டும் காணாமல் நகர்ந்துசெல்ல வேண்டியிருக்கிறது. பெரும்பான்மையை அனுசரித்துச் செல்லாத சிறுபான்மையினர் பல்வேறு வகைகளில் அடக்கி, ஒடுக்கப்படுகின்றனர். இதன் மறுவளமாக அப்துல் கலாம் பிராண்ட் முஸ்லிம்களை உற்பத்தி செய்து தனது ரத்தக்கறைகளை மறைத்துக்கொள்ளப் பார்க்கின்றனர் இந்து பாசிஸ்ட்டுகள்.
மதம் என்பது மனிதனுக்கு அபீனைப் போன்றது என்றார் காரல் மார்க்ஸ். அது இந்துவாக இருந்தாலும், கிறிஸ்தவமாக இருந்தாலும், இஸ்லாமாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். ஆனால் யதார்த்தத்தை முன்வைத்தே நாம் பேச வேண்டியிருக்கிறது. தேச எல்லைகளைக் கடந்து உலக அளவில் ஒடுக்கப்படும் இனமாக இருப்பது இஸ்லாம்தான். அமெரிக்க வல்லாதிக்கம் தனக்கான முகமாக முதலாளித்துவத்தை சூடிக்கொண்ட கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட்டுகளை எதிரிகளாகக் கட்டமைத்தது; இப்போதும் அது தொடர்கிறது. அதன் அடுத்த பதிப்பாக இப்போது உலக அளவில் இஸ்லாமியர்கள் அத்தனை பேரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது. இது வேறு எந்த மதத்துக்கும் நிகழாதது.
'கீற்று' இணையதளத்தின் ஆறாம் ஆண்டு தொடக்கவிழாவை ஒட்டி, இந்திய முஸ்லிம்களின் சமூக, அரசியல் வாழ்நிலை குறித்தான ஒரு அமர்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சகோதரர்கள் தங்களது வேதனைகளை, வலிகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். நம்மிடையே உருவாக்கப்பட்ட, உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டமிட்ட முஸ்லிம் காழ்ப்பை நாம் கலைந்தாக வேண்டும். அச்சுமூட்டுவதாகவும், பதற்றம் தருவதாகவும் இருக்கும் தினவாழ்வில் இருந்து முஸ்லிம் மக்களை விடுதலை செய்ய வேண்டும். இதற்கான முற்போக்கு சக்திகளின் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக கீற்றின் ஆறாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி இந்த நிகழ்வை கீற்று இணையதளம் ஒருங்கிணைக்கிறது.
கீற்று இணைய தளத்தின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா
நாள்: 24.07.2010, மாலை 5.00 மணி
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், அண்ணா சாலை, சென்னை.
அமர்வு - 1
இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்
(பாதிக்கப்பட்ட சகோதரர்களின் நேரடி வாக்குமூலங்கள்)
கருத்துரை:
வழக்கறிஞர் புகழேந்தி (ஒருங்கிணைப்புச் செயலர், தமிழக மக்கள் உரிமைக் கழகம்)
'தலித் முரசு' புனித பாண்டியன்
அமர்வு - 2
"குடிஅரசு எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநலவாழ்வுக்கோ, கீர்த்திக்கோ நடைபெறவில்லை. யோக்கியமாய் உண்மையாய் நடக்கக்கூடிய காலம் வரை நடக்கும். அவ்விதம் நடக்க அதற்கு யோக்கியதை இல்லையானால், அதுதானே மறைந்துவிடுமேயல்லாமல், மானங்கெட்டு விலங்குகளைப்போல் வாழாது." - பெரியார், குடிஅரசு - தலையங்கம் - 01.05.1927
கீற்று.காம் - பயணமும், இலக்கும்
கருத்துரை:
சுப.வீரபாண்டியன்
விடுதலை இராசேந்திரன்
ஜெயபாஸ்கரன்
பாரதி கிருஷ்ணகுமார்
மாலதி மைத்ரி
பாஸ்கர் சக்தி
யுகபாரதி
அனைவரும் வருக
- கீற்று ஆசிரியர் குழு
தொடர்புக்கு: 99400 97994
சகோதரர் பெரோஸ்கானுக்கு நீங்கள் என்ன பதில் அளித்தீர்கள் என்று காட்டுங்கள். எந்த இடத்திலும் அவரது வலிமையான வாதங்களுக்கு பதில்களை நான் பார்க்கவில்லை. மேலும் அவர் தானாக எதையும் எழுதவில்லை. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் கற்றறிந்த அறிஞர்களது வார்த்தைகளையேயு மே அவர் மேற்கோள் காட்டுகிறார். நீங்கள் இப்படி நாஸ்திகர்களிடமு ம் காபிர்களிடமும் நல்ல பெயர் வாங்குவதற்காக திரிபுதாளத்தை செய்துகொண்டிருக ்கிறீர்கள் என்பதை நீங்களெ உங்கள் வாக்குமூலமாக மேற்கண்ட பின்னூட்டத்தில் தெளிவுபடுத்தியி ருக்கிறீர்கள். காபிர்களது நட்போ, அல்லது நாஸ்திகர்களது நட்புக்காகவோ திரித்து பேசுதல் தவறாகும். உள்ளே பேசிகொள்வோம். ஆனால் பகிரங்கமாக பேசவேண்டாம் என்று பலமுறை சொல்லியிருக்கிற ீர்கள். இது அல்லாவைத்தவிர வேறொருவருக்கு அஞ்சுவதற்கு ஒப்பாகும். அல்லாஹ் போதுமானவன்
(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
"...இஸ்லாத்தின் பக்கம் அவர்களை அழைப்பீராக. அவர்கள் உமக்கு பதிலளித்தால் அதை ஏற்றுக்கொள்வீரா க. பிறகு அவர்களிடமிருந்த ு (போர் புரிவதிலிருந்து ) விலகிக்கொள்வீரா க, பின்னர் அவர்களின் பிரதேசத்திலிருந ்து இடம்பெயர்ந்து
முஹாஜிர்கள் வாழும் பிரதேசத்திற்கு ஹிஜ்ரத் செய்யும்படி அவர்களுக்கு அழைப்பு விடுப்பீராக. அவர்கள் இவ்வாறு செய்தால் பிறகு முஹாஜிர்களுக்கு
உரியதைப் போன்ற சாதகங்களும் பாதகங்களும் (உரிமைகளும் கடமைகளும்) அவர்களுக்கும் உண்டு (என்று கூறுவீராக) ..."(ஸஹீஹ் முஸ்லிம் 4294)
இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும ் விஷயம் என்னவென்றால். அவர்கள் வாழும்
நிலப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து முஹாஜிர்கள் (ஹிஜ்ரத் செய்தவர்கள்) வாழும் நிலப்பகுதிக்கு ஹிஜ்ரத் செய்யாவிட்டால் முஹாஜிர்கள் பெற்றுள்ள
உரிமைகளை பெறமுடியாது. அதாவது இஸ்லாத்தின் நிலப்பரப்பில் வாழ்கின்ற முஸ்லிம்களின் உரிமைகளை பெறமுடியாது, ஆகவே இந்த ஹதீஸ் முஹாஜிர்கள் வாழும் நிலப்பகுதிக்கு ஹிஜ்ரத் செய்பவர்களுக்கு ம் ஹிஜ்ரத் செய்யாதவர்களுக் கும் இடையிலுள்ள வேறுபாட்டை தெளிவாக விளக்குகிறது, ருல் முஹாஜிரீன் என்பது அல்லஹ்வின்தூதர் (ஸல்) காலத்தில் இஸ்லாத்தின் நிலப்பகுதியாக இருந்தது.
அதாவது தாருல் இஸ்லாமாக இருந்தது. இதற்கு அப்பால் இருந்த அனைத்து நிலப்பகுதிகளும் தாருல்குப்ர் என்று கருதப்பட்டது.
// மேலும் அவர் தானாக எதையும் எழுதவில்லை. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் கற்றறிந்த அறிஞர்களது வார்த்தைகளையேயு மே அவர் மேற்கோள் காட்டுகிறார்.// என்று கூறியுள்ளீர்கள் . சரிதான். நீங்கள் மற்றவர்களின் கருத்துக்களை நுனிப்புல் மேய்கின்றீர்களே தவிர அக்கருத்துக்கள் சரியா தவறா என்றோ அல்லது குறைந்தபட்சம் அக்கருத்துக்கள் எதற்காக எந்த சூழ்நிலைக்காக கூறப்பட்டுள்ளது என்றோ சிந்தித்திருந்த ீர்கள் என்றால் நான் எனது முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பட்டப்படி சில அறியாமை முஸ்லிம்களுக்கு தாங்களே மிகச் சிறந்த உதாரணமாக இருந்திருந்திரு க்க மாட்டீர்கள்.
(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் . – (அல்குர்ஆன் 38:43)
அல்லாஹ்வினால் அருளப் பட்ட எவ்வித சந்தேகத்திற்கும ் இடமில்லாத குர்ஆனின் வசனங்களையே ஆராய்ந்து பார்க்குமாறு அல்லாஹ் கூறியுள்ளானே. அவ்வாறு இருக்கையில் மற்ற அனைத்தும் எம்மாத்திரம். அனைத்தையும் நாம் சிந்தித்து ஆராய வேண்டாமா? சிந்திப்பதைக் கூட மார்க்க கடமையாக ஆக்கியுள்ள பாரம்பரியத்தில் வந்த எனது சகோதரரே, மற்றொரு தளத்திலிருந்து எதையும் copy & paste செய்வதற்கு முன் நன்கு சிந்தித்து செயல் படுங்கள். நான் ஏதாவது தங்களை தவறாக கூறியிருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள்.
எனவே எனதருமை மனிதகுல சகோதரர்களே, நானும் என்போன்ற பெரும்பான்மை முஸ்லிம்களும் – இஸ்லாத்தினைப் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் மற்ற மாற்று மத சகோதரர்களிடம் புரிந்துணர்வை ஏற்படுத்தி நாம் அனைவரும் மனிதர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான ் முயற்சிக்கின்றே ாம். இருப்பினும் சில முஸ்லிம்களின் தவறான விளக்கங்களைக் கொண்டு – இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீதான உங்களது காழ்ப்புணர்வை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அதுபோல் இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வை ஏற்படுத்தி இரத்த ஆற்றை ஓட்டி அதன் மூலம் மற்ற மக்களின் மீது தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள துடிக்கும் 'தன்னைத் தானே உயர்த்திக் கொண்ட' இந்துத்துவ தீவிரவாதிகள் – அவர்கள் கூறும் பொய்களுக்கும் வரலாற்றுப் புரட்டுகளுக்கும ் ஆதாரமாக இத்தகைய சில முஸ்லிம்களின் வார்த்தைகளையே ‘மொட்டையான ஆதாரங்களாக’ மேற்கோள் காட்டுகின்றார்க ள். எனவே யாராக இருந்தாலும் மேம்போக்காக எந்த முடிவுக்கும் வராமல் அன்பையும் சகோதரத்துவத்தை யும் நீதியையும் நேர்மையையும் போதிக்கும் இஸ்லாத்தில் இப்படியெல்லாம் இருக்காது என்றும் – அது சம்பந்தமான விளக்கங்களை சகோதர முஸ்லிம்களிடம் கேட்டு தெளிவடையுமாறும் கேட்டுக் கொள்கின்றேன். என்றால் தான் இந்த உலகத்தினை நாம் ஒரு அமைதிப் பூங்காவாக கட்டமைக்க முடியும்.
(குறிப்பு: மூன்று பேர்கள் இருக்கும் இடத்தில் இரண்டு பேர்கள் மூன்றாமவருக்கு தெரியாத மொழியில் அந்த மூன்றாமவரைப் பற்றி சாதாரணமாக பேசினால் கூட அதை அவர் தவறாகத் தான் விளங்கிக் கொள்வார். எனவே தான் நான் அனைத்தினையும் தமிழில் மொழிபெயர்த்தே எழுதுகின்றேன். அதைப் போலவே இங்கு சகோ. ரியாசுதீன் பயன் படுத்தியிருக்கு ம் சில அரபி வார்த்தைகளுக்கு ம் பொருள் எழுதுகின்றேன்.
1. காபிர் - இஸ்லாமிய கொள்கைகளின் மீது நம்பிக்கையில்லா த - முஸ்லிம் அல்லாத மற்றவர்களை குறிக்க பயன்படும் பொதுவான வார்த்தை. அதாவது ஆங்கிலத்தில் Non-Muslim என்று கூறலாம். இது மற்றவர்களை இழிக்கவோ பழிக்கவோ பயன் படுத்தப் படும் சொல் அல்ல. சாதாரணமான சொல் தான். இதைப் பற்றி பெரும்பாலான மாற்று மத சகோதரர்கள் தவறாகவே விளங்கி வைத்திருக்கிறார ்கள். அல்லது விளங்க வைக்கப் பட்டிருக்கின்றார்கள்.
2. சகோதரர் சம்பந்தமேயில்லா மல் குறிப்பிட்டுள்ள அந்த ‘பாதி’ நபிமொழியில் வரும் ‘தாருல் இஸ்லாம்’ என்றால் இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் படி நேர்மையாகவும் நியாயமாகவும் ஆட்சி நடைபெறும் பகுதிகளைக் குறிக்கும். ‘தாருல் குப்ர்” என்றால் அவ்வாறு இஸ்லாமிய ஆட்சி நடைபெறாத இடங்களை பொதுவாக குறிப்பிடும்.
3. ஹிஜ்ரத் – முஸ்லிம்களால் தங்கள் இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்ற முடியாமல் மற்றவர்களால் அச்சுறுத்தப் படும் போது தங்கள் கொள்கைகளை காப்பாற்றிக் கொள்ள தனது அத்தனை சொத்துக்களையும ் விட்டு விட்டு வேறு பாதுகாப்பான இடத்திற்கு செல்வதை குறிக்கும். அவ்வாறு ஹிஜ்ரத் செய்பவர்கள் முஹாஜிர்கள் எனப்படுவர். இவையெல்லாம் சாதாரண அரபி வார்த்தைகள் தானே தவிர எந்த சங்கேத வார்த்தைகளம் அல்ல. தவறான அர்த்தம் கொண்ட வார்த்தைகளும் அல்ல. அர்த்தம் விளங்கிக் கொண்டால் தவறான புரிதலுக்கு வாய்ப்பிருக்காத ு என்பதாலேயே குறிப்பிடுகின்ற ேன். எனது வெளிப்படையான நோக்கம் அனைவருக்கும் புரிந்திருக்கும ் என்று நம்புகின்றேன்.
உங்களுக்கு சொல்ல எனக்கு இரண்டு வசனங்கள்தாம் உண்டு. பிறகு உங்களுடைய நிலைப்பாட்டை சொல்லுங்கள்.
5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையு ம் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்
4:139. இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்கி றார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.
அல்லாஹ் போதுமானவன்.
3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்க ாக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றன ர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள் . கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
நான் அனைத்து இஸ்லாமியர்களும் பயுங்கரவாதத்தில ் ஈடுபடுவதில்லை,ஆ னால் ஒரு சிலர் செய்தாலும்,அது அந்த மொத்த மதத்தை சார்ந்தவரை பாதிக்கிறது,
நாட்டின் பாதுகாப்பு கருதி,காவல் துறையினர் சில சமயங்களில் சந்தேகத்தின் பேரில் சில நிரபராதி முஸ்லீம்களையும் கைது செய்ய நேரிடுகிறது, இதை தவிர்க்க முடியாது, அதற்காக இந்திய அரசு இஸ்லாமியருக்கு எதிராக் செய்லபடுகிறது என்று பேசுவது போலி முற்போக்கு சிந்தனை,
Keetru.com il pothuvana karuthukalai sonnerkal anal sila madhavathikal ithanaium thavaraga purinthu melum melum INTHU THAMILAN, MUSLIM ena mari mari mudintha oru visayathil athigam akkari kattum makkal yen ezha piratchanaiyil entha amaippum neradiyaga ilangai sellavillai muthalil nam manithan piragu than MATHAM, MOZHLI ellam yenedral pala andukalukku munnal moliye illai irunthalum manithan valthan, netraya munnorkal than saathi matham ena pirithu vittargal pavam avarkalukku enna therium anal indraya samuthayathil eththanai arivial valarchi innum nam yen muttal thanamaga valavendum satru yosikkavum manithaaa.......................
sheik,
tirupur..
RSS feed for comments to this post