நாள்: 15-08-2014, வெள்ளிக்கிழமை, மாலை 5 மணிக்கு.

இடம்: RKV ஸ்டுடியோ, வடபழனி பேருந்து நிலையம் எதிரில், விஜயா மருத்துவமனை அருகில்.

சிறப்பு விருந்தினர்கள்:

1. புத்ததேப் தாஸ் குப்தா (மேற்கு வங்க திரைப்பட இயக்குனர்)
2. சஷி குமார் (சேர்மன், ஆசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம்)
3. அம்ஷன் குமார் (திரைப்பட இயக்குனர்)
4. இமையம் (எழுத்தாளர்)
5. அழகிய பெரியவன் (எழுத்தாளர்)

இவர்களுடன் தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருதைப் பெறும் ஆனந்த் பட்வர்தன்.

இவர்கள் மட்டுமின்றி, தமிழ் சினிமாவில் இருந்து பல்வேறு முக்கியமான திரைப்பட இயக்குனர்களும், எழுத்தாளர்களும் பங்கேற்கவிருக்கிறார்கள்.

நிகழ்வில் புத்தர் கலைக்குழுவின் பறை இசை நிகழ்த்தப்படவிருக்கிறது. அண்மையில் புதிய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் விருது பெற்ற மணிமாறன் குழுவினர் இந்த பறை இசை நிகழ்வை நிகழ்த்துகிறார்கள். நிகழ்ச்சி சரியாக 5 மணிக்கு ஆரம்பித்துவிடும்.

நிவேதனம் உணவகத்தினர் சார்பாக சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

Pin It