பேச்சற்று வெளியேற நேர்ந்தது
இறுகிய உதடுகளின் இருண்மையை
தந்து நின்ற போது..
பசித்தலையும் சிந்தனைகளை அதட்டி
தாகம் தீர்க்க கொடுப்பதற்கு
கைவசம் வார்த்தைகள் இல்லை..
காரணங்களின் வேர்களைத் தேடுதல்
சாத்தியமற்ற நிழலின் ஆழம் போல
வெயில் வேறெங்கோ உயரத்தில் எரிகிறது..
தனிமை அறைக்கு திரும்புதல்
அர்த்தமிழந்த ஒளியை பொழியச் செய்கிறது
சிறுமையின் இருள் மூலைகளில்..
மென்மையாகத் தட்டப்படும் கதவுக்கு அப்பால்
ஒரு பிசாசையோ பூதத்தையோ
எதிர்பார்க்கிறது செவி..
மீண்டும் சில அவச் சொற்கள்
பூங்கொத்தாக நீட்டப்படலாம்
பரிசென வாங்கிக் கொள்ளும்படியான
உத்தரவாக..!
- இளங்கோ (
பிரியத்தின் பாத நிழல்
More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.