பேச்சு
சுற்றி
சுழன்றதொரு
சம்பவத்தைப் பற்றி.
அக்கம் பக்கம்
குறித்தெந்த
அக்கறையுமில்லை
அவர்களிடம்.
சம்பவ இடம்
பற்றியும்
சரியான
தகவலில்லை.
பேச்சின்
சாரத்தை வைத்து
சம்பவத்தை அறிதலும்
சாத்தியப்படவில்லை.
உயிரிழப்பு ஏதுமில்லை
என்றொலித்த
வாக்கியமொன்றோடு
அங்கிருந்து கிளம்புகையில்
சற்று
ஆசுவாசமாயிருந்தது.
- செல்வராஜ் ஜெகதீசன்
சம்பவம்
- விவரங்கள்
- செல்வராஜ் ஜெகதீசன்
- பிரிவு: கவிதைகள்
More articles by செல்வராஜ் ஜெகதீசன்
- பத்திரமும் தைரியமும் (29 அக் 2010)
- பாதிப்பாதி (15 ஜூலை 2010)
- வாழ்வின் நிலைகளில் (21 ஜூன் 2010)
- பின் தொடரும் நிழல் (09 ஜூன் 2010)
- ஏற்புடையதாய்.. (15 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.