பேச்சு
சுற்றி
சுழன்றதொரு
சம்பவத்தைப் பற்றி.
 
அக்கம் பக்கம்
குறித்தெந்த  
அக்கறையுமில்லை
அவர்களிடம்.
 
சம்பவ இடம்
பற்றியும்
சரியான
தகவலில்லை.
 
பேச்சின்
சாரத்தை வைத்து
சம்பவத்தை அறிதலும்
சாத்தியப்படவில்லை.
 
உயிரிழப்பு ஏதுமில்லை
என்றொலித்த
வாக்கியமொன்றோடு
அங்கிருந்து கிளம்புகையில்
சற்று
ஆசுவாசமாயிருந்தது.

- செல்வராஜ் ஜெகதீசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.