Ladyஅரியணை அமர்த்தியவ ளிதயத்தி லிருந்தே
ஆட்சிசெய் யென்று அன்புக் கோளெனக்கு
ஏவித்தான் எழுப்பினாள் எழுந்து மோதிக்
கரைகளைத் தாக்கும் காதல் அலைகளை!

ஆணவம் நீங்கி யாங்கு ஆழ்வேனெனும்
அதிகாரச் சிரசின்றி அவ்விதயத்தே அமர்ந்- தவள்
ஆசைக் கனவோடவள் வேட்கைகட்கிசைய
எதை, எப்படி, எப்போது செய்வதென வறியாதே

விழித்தவ் வலைகளின் திக்கற்ற போக்கில்
மிதக்கிறேன், மூழ்கிறேன், மிதக்கிறேன்
மீண்டும் மீண்டும் பேதை நானென் நாட்டுக்
கோனா யங்கு என்றுமே இருந்திட! 

அ.முத்தன், நியூயார்க் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.