திரும்ப திரும்ப
அடித்துக் கொள்கிறான்
வலி சகித்து
படையலுக்குமுன்
திருடித் தின்றதற்காய்
அப்பாவின் சாட்டை பேசியது
நினைவில்
கன்றி நிற்கும் தேகம்
இரத்தக் கசிவோடு
புரையோடிப்போன
புண்களில்
அடிகளின் சரித்திரம்
விரட்டும் பாதங்கள்
தெய்வத் திருவடியென
தொழுகிறான்
மீண்டும் மீண்டும்
இத்தனைக்கும் பிறகும்
கை விரிப்பவர் மீதான
கோபத்தை
தன் மீதே காட்டுகிறான்
மற்றுமொருமுறை
சவுக்கை வீசி
- மாறன்
அடி
More articles by மாறன்
- தேசிய நிலப் பயன்பாட்டுக் கொள்கை - கார்ப்பரேட்டுகள் நடத்தும் 'நிலப் போர்!' (15 ஜூலை 2019)
- மீண்டும் (25 ஏப் 2010)
- விசும்பல் (25 ஏப் 2010)
- முரண் (25 ஏப் 2010)
- ஹைக்கூ (25 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.