Faceஎன்னுள் என்னைத்தேடி
தொடங்கினேன் ஒரு பயணம்

இவ்வளவு இலகுவான முயற்சியாய்
இல்லையது
பாதைகள் முழுக்க இடைஞ்சல்களும்
தடங்கல்களும்
விலக்கித் தொடர்வது பெரும்பாடாக
கண்டேன் விசித்திரங்களை
விபரீதங்களுங்கூட

அறியா உலகங்களுள் நுழைந்த போதில்
காத்திருந்தன ஆச்சர்யங்கள்; அருவருப்பில்
ஆத்திரமூட்டின சில
ச்சே! இதுவும் நானா

படிமக் கோபுரங்கள் இடிந்து சிதைந்து
கசப்பின் கசகசப்பினூடாக
எப்போதாவது வீழ்ந்து சந்தோஷத் தேந்துளி

இருள் சூழ்ந்த புதுத் தடத்தில்
தொடர்வதென் பெருவழி உள்முகமாய்

சலிப்பில்
திரும்பிவர யத்தனிக்கையில்
என்னைத் தெரிந்த நானின் இருப்பு
எழுந்ததொரு பெருங்கேள்வியாய்
என் முன்.

அன்பாதவன், மும்பை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It