Kasi Anandan
என்னருந் தமிழா!
ஏனடா... ஆண்டான்

புண்ணினை நக்கிப்
போட்டதை விழுங்கும்

உண்ணி நாயானாய்
ஒழிந்ததோ மானம்?

கண் சிவந்தோடிக் 
களம் புக வாடா!

ஆண்டவன் அன்றோ?
அட தமிழா நீ

பாண்டியன் அன்றோ?
பாரடா உன்னை

ஈண்டு மாற்றார்கள் 
எச்சிலால் வளர்த்தார்...

கூண்டினை நொறுக்கு!
குதியடா வெளியே!

உரிமை இழந்தாய்!
ஊழியஞ் செய்தார்!

வரிகள் கொடுத்தாய்!
வளைந்து பிழைத்தாய்!

விரிபழம் புகழை
விற்றனை பாவி!

எரிமலை ஆகடா!
எழுக! நீ எழுக!

தூக்கடா வாளை!
தோளை உயர்த்தடா!

தாக்கடா பகையை !
தலைகளை வீழ்த்தடா!

நீக்கடா தளையை!
நிமிர்ந்து நில்லடா!

ஆக்கடா கொற்றம்!
ஆளடா இன்றே!
Pin It