கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- மாறன்
- பிரிவு: கவிதைகள்
வளையல்
தங்க வளையல் கேட்டு
தாம்பத்யத்தில்
தர்ணா நடத்துகிறாள்.
வளைய வளைய வந்தாலும்
வளையல் இல்லாவிடில்
முழுமை பெறாது
அழகென்பதை
ஒப்புக்கொள்கிறேன்
கண்ணாடி வளையலுக்குக்
கிடைக்கின்ற மவுசு
எப்போதும் வாய்ப்பதில்லை
முன் ஜென்மத்தில்
சாபம் பெற்ற
பிளாஸ்டிக் வளையல்களுக்கு
வளைகாப்பு நடத்தப்படாது
குழந்தை ஈன்றவளின்
மனக்குறை
மண்ணுக்குப் போகும்வரை
மறைந்ததாய் பேச்சில்லை
ஒரு கட்டியணைப்பின்போது
வளையல்கள் சிதறி
இரத்தம் கசிந்ததை
சந்திக்கும்போதெல்லாம்
மறக்காமல் சொல்வாள்
மறந்து சென்ற காயத்ரி
அனைவருக்கும் பிடித்த
அன்பான வளையல்கள்
அசிங்கப்பட்டுப் போவது
கணவனை இழந்தவளின்
கைகளிலிருந்து
உடைக்கப்படும்போதுதான்
- மாறன்