ஆவலோடு வந்த மகன்
ஏமாறக்கூடாதென்று
குடுவை நீரைக் கையிலேந்தி
பெளர்ணமி காட்டுகின்றேன்

விரல்களின்
இடைவேளி வழியே
வழிந்தோடிவிடுகிறது

காணாமல்போன
நிலவு குறித்து விசும்புகிறான்

மறைந்துபோன
ஆறுபற்றி
நான் யாரிடம் கூறுவது?

மாறன் 
Pin It