templeஅவன்
சாரம் கட்டினான்,
கல் உடைத்தான்,
மண் சுமந்தான்,
சாந்து குழைத்தான்,
கோயில் கட்ட.
குடமுழுக்கு நடந்தபின்
பொங்கல் வைத்தான்
கோயிலுக்கு வெளியே.
பூசை செய்தான்
கோயிலுக்கு வெளியேயிருந்து.
ஏன்?
இறைவன் எங்குமுள்ளான்
என்பதினாலா?
-செங்காளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It