அழுது கொண்டிருந்தாய் நீ
அமர்ந்திருந்தேன் நான்
கொஞ்சகொஞ்சமாய்
கண்ணீரோடு 'நீ' வழிந்தோட
கண்ணீரில் 'நான்' கரைந்தோட
என்னைத் தொலைத்த நான்
உன்னைத் மறந்த நீ என
நாமானோம் நாம்.

ஜெ.நம்பிராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It