என்றோ ஒரு நாள்
கீறிவிட்ட உடலாலும்
அன்றே திணிக்கப்பட்ட
ஒரு விதையாலும் மனம்
கோளாறுகள் நோண்ட
வீதியில் திரிகிறேன்

என் கண்களுக்குத் தெரிவது
ஒரு குழந்தையின்
ஐஸ் குச்சியும்
அவள் கையிலிருக்கும் பலூனும்

என்னைச் சுற்றி
மடையர்களாய் நிற்கும்
இந்தக் கூட்டங்களைக்
கேவலமாக மதிக்கிறேன்

இந்த தெருவே என் வீடு
சாக்கடைகள் என் குளியலறை
குப்பைத் தொட்டி என் சாதஅறை

நினைவுகளின் பிணைப்புகளினால்
என் மேனியில்
படர்ந்து கொண்டிருக்கும்
செயற்கைத் தோல்களை
அங்கங்கே கிழிக்கிறேன்.
என் வீட்டில்
குழந்தையைத் தவிர
கூட்டத்திற்கு குறைவில்லை

பெளர்ணமியின் வேதனையை
முழுமையாக ரசிக்கிறார்கள்
பூலோகக் காவியர்கள்
கலைந்து போன மேகங்களை
எடுத்து போர்த்திவிட
கவலை எதற்கு இவர்களுக்கு?

ஆதவா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.