Child Eyesகுழந்தையின் கண்கள் அதிசயங்களால்
நிரம்பியிருக்கின்றன.

அன்று பெய்த, அவளுக்கான
முதல் மழை,
அவளுக்கேயான குளிர்ச்சியை,
கண்களில் ஒட்டிச் சென்றது.

ஆச்சரியங்கள் வழிந்தோடும் உலகு
என அவள் நினைத்திருக்கலாம்.

மிகுந்த ஆச்சரியத்துடன்
ஒளியைக் கண்ட கண்கள்,
இருளைக் கண்டும் மரூண்டன.

அன்றைய இடியும், மின்னலும்
பயங்கரங்களும் நிரம்பியது உலகு
எனவும் உணர்த்தியது அவளுக்கு.

ஆச்சரியங்களும், மாயங்களும், மர்மங்களும்
நிரம்பிருக்கும் உலகு இது, அவளுக்கு.

நான் துயரத்திலாழ்ந்தேன்,
நான் எப்போது அக்கண்களைத் தொலைத்தேன்?

ஆண்டவர்,
விசித்திரங்கள் நிறைந்த,
நம்பிக்கும் ஒளிரும் அக்கண்களை,
எப்போது எனக்குத் தருவார்?. 

ம.ஜோசப் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.