Womanபுளிய மரங்களும்
புழுதியில்லாத பொழுதுகளும்
இறுக மூடி
என்னுடலின்
வழமையான வாழ்கைப் போராட்டம்
பனிப்புகாருக்குள் பொசிந்தபடி
கரைந்து கொண்டிருக்கிறது காலம்

என் உயிர்க் கடிகாரம்
பிசகாமல்
இயற்கையும் வஞ்சித்து
நெஞ்சை அரிக்கும்
கசப்பான காற்றோடு - என்
தேசம் அனுப்பி வைக்கும்
உணர்வின் வலிகளையும்
செதுக்கிக் கொண்டிருக்கிறது

உறக்கம் கலையிழந்து
நீண்ட விழித்திருப்புக்கள்...
காணாமல் போவதும்
கப்பம் கேட்பதும்
கடத்திச் செல்வதும்
காட்டுமிராண்டி
அரக்க நிழல்கள்
மீட்டி அசைபோட்டு
மூச்செறியும் நேரத்தில்...
சுகம் கசிந்து
மனம் மகிழ்ந்து
நான் மட்டும் இப்போ
எப்படிச் சரிந்து தூங்குவது?

எனக்குத் தனிமையில் உன்
நினைவுகளும் பயங்கரமாக இருக்கிறது
சுகமற்று சுமந்துவரும் உன்
பழிவாங்கும் வார்த்தைகளால்; இப்பொழுது...

நவஜோதி ஜோகரட்னம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by நவஜோதி ஜோகரட்னம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.