பூவிரியும் போதினிலே
வண்டினங்கள் கவிபொழியும்!
தாவிவிழும் மலையருவி
கவிபொழியும்! சோலைதொறும்
கூவிநின்று பூங்குயில்கள்
கவிபொழியும் தமிழ்நாட்டில்....
கோவிலிலே மணியொலியும்
கவிபொழியும் போதாதோ?
ஆவியொன்று தந்தெனையும்
அருந்தமிழில் கவிபொழிய
மேவியவள் திருநோக்கம்
மிகவுணர்ந்து நானொருவன்
நாவினிக்க நெஞ்சினிக்க
என்னுடையான் அடிநயந்து
மாவிளக்கின் ஒளியேற்றி
மலர்சொரிந்து கவிபொழிவேன்!
Pin It