விரட்டித்தொடர்ந்து அலையடித்து
காதலின் எண்ண அலைகள்
Loveஈரலிக்கச் செய்யும் யௌவனத்தின்
பரந்தவெளியில் நின்றபடி என்
ஐம்புலன்களினது எல்லாத் தவிப்புகளையும்
அகிலத்தின் அனைத்து வர்ணங்களையும் தொட்டு
பேரெழில் ஓவியங்களாக வரைய முயல்கிறேன்
வர்ணங்கள் போதாமல் அடம்பிடித்து
தன்னில் ஒட்டிய வண்ண மைத்துளிகளை
வெளியெங்கும் தெளிக்கிறது
கவிதைகளால் செய்த தூரிகை

துளித்துளியாய்ப் பெய்யும்
வர்ணங்களின் மழையைத் தங்கள்
இறக்கைகளில் ஏந்தி உன்னிடம் வருகின்றன
வண்ணத்துப்பூச்சிகளும் பெரு விருட்சப்பறவைகளும்
தென்றல் தொட்டாலும் சிணுங்கும் பூச்செடி நீ
செட்டை, சிறகு தொடாமல்
என் ஏகாந்தம் சிந்திய
ஓவியங்களைப் பார்த்து ரசி
தனித்து வாடும் என் துயர் உணர்

எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It