விரட்டித்தொடர்ந்து அலையடித்து
More articles by எம்.ரிஷான் ஷெரீப்
- ஜப்பான் பேனா நண்பி - இஸீரு சாமர சோமவீர (01 பிப் 2012)
- அரசியல் (16 மே 2011)
- ட்ரோஜனின் உரையாடலொன்று (24 பிப் 2011)
- மரணம் துரத்தும் தேசத்துக்குரியவனாக...! (24 ஏப் 2010)
- விதிக்கப்பட்ட மரணம்! (23 ஏப் 2010)
காதலின் எண்ண அலைகள்
ஈரலிக்கச் செய்யும் யௌவனத்தின்பரந்தவெளியில் நின்றபடி என்
ஐம்புலன்களினது எல்லாத் தவிப்புகளையும்
அகிலத்தின் அனைத்து வர்ணங்களையும் தொட்டு
பேரெழில் ஓவியங்களாக வரைய முயல்கிறேன்
வர்ணங்கள் போதாமல் அடம்பிடித்து
தன்னில் ஒட்டிய வண்ண மைத்துளிகளை
வெளியெங்கும் தெளிக்கிறது
கவிதைகளால் செய்த தூரிகை
துளித்துளியாய்ப் பெய்யும்
வர்ணங்களின் மழையைத் தங்கள்
இறக்கைகளில் ஏந்தி உன்னிடம் வருகின்றன
வண்ணத்துப்பூச்சிகளும் பெரு விருட்சப்பறவைகளும்
தென்றல் தொட்டாலும் சிணுங்கும் பூச்செடி நீ
செட்டை, சிறகு தொடாமல்
என் ஏகாந்தம் சிந்திய
ஓவியங்களைப் பார்த்து ரசி
தனித்து வாடும் என் துயர் உணர்
- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.