love_flowers
அகாலத்தில் தொலைபேசியை
கன்னத்தில் தவழவிட்டு
உன் குரலினை ஏந்துகையில்
அழகிய சோலைகளில் பசும் மலைவனங்களில்
செம்மாலைக் கடற்கரைகளில்
யன்னலுக்கு வெளியேயான நள்ளிரவு மழையில்
மொட்டைமாடி நிலவில்
உன் கைகோர்த்து நடப்பதாகச்
சொப்பனங்களில் வாழ்ந்தபடியிருக்கிறேன்

மெல்லிசையை ஒத்தது
பெருஞ்சாறலாய் மனம் நனைக்க
விழிகள் உறக்கத்தைத் தொலைத்து
விட்டத்தில் தேவதை நடனங்களைத் தேடும்படி
மனம் முழுதையும் நிறைத்த நீ
என் வாழ்வினைக் காதலால் நிரப்ப
என்றருகில் வரப்போகிறாய்

எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.