பால் புகட்டும் அம்மாவுக்குள்ளிருந்து
பதறியெழும் பெண்ணொருத்தி
மாராப்பை கவனமாய் திருத்திய பின்
தண்ணீரை மட்டுமே துவட்டவல்ல
டவல் கொடுத்து விரட்டும் போதிருந்து
தாளிட்டுக்கொண்டு குளிக்கத் தொடங்குகிறான்
அதுவரை மகனாயிருந்த ஆண்

நறுமணம் கரைந்தோடும் சோப்புநுரைக்குள்
உரையாடலற்று விரைத்துக் கிடக்கின்றனர்
தாயும் மகனும்.
ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.