எனது கனவில் சிறுபூச்சியாய்
நீரோட்டத்தில் தலை காட்டியபடி
அண்ணாந்து மிதந்துகொண்டிருக்கிறாள்
Lady in water
பிறகு கைகளை நீட்டிக் காற்றை வாரியணைத்து
மூழ்கி எழ மாலை ஒளி வலையென நீருக்குள்
பரவுகிறது

குட்டிமேகங்கள் திட்டுத் திட்டாக
நகர்ந்துகொண்டிருக்க
சூரியன் ஒவ்வொரு மேகத்திற்குள்ளும்
மறையும்போது
மூழ்கித் தரைதொட்டு ஒருபிடி மண் அள்ளி
கரையில் வைத்துத் திரும்புகிறாள்
மேற்கே கரையொதுங்கும் சூரியனை
தவிர்க்க மீண்டும் மூழ்குகிறாள்
நீருக்குள் புதைவதில் உள்ள சுகமும் இதழும்
தாய்ப்பாலுக்குள் நிகழ்வதெனக்கொண்டு
அடி மண்ணைத் தொடுகிறாள்
வீடு திரும்பும் நினைவறுந்து

சந்தடியற்ற ஆறு அவளால் நிரம்பி
வழிந்து கரை தாவுகிறது.

மாலதிமைத்ரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It