நகர்கிறேன்
தெளிந்த நீரின் பிரவாகமாய்
தடயங்களை விட்டுச்செல்வதில்லை
பாறைகளின் வன்மம்

நகர்த்தப்படுகிறேன்
Angry lady
உதிர்ந்து விட்ட சருகுகள்
சொல்ல மறந்த சலசலப்பில்

வரையறுக்கப்படாதது
என் வெளி
வெளிச்சமும் இருளும்
வித்தியாசப் படுவதில்லை

பெருமழையின் சுவடுகள்
எதிர்பாராத வெள்ளமாயும்
வானவில்லின் பிரதிபலிப்பிலும்

உயிர்ப்புடன் பயணிக்கிறேன்
தீராநதியாய் நான்

லஷ்மி சாஹம்பரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It