சூழ்ந்திருந்த தனிமையில்
More articles by இப்னு ஹம்துன்
- காற்றில் கனக்கும் சொற்கள் (18 மே 2010)
- முட்களும் பூக்களும்! (25 ஏப் 2010)
- நகையே! (25 ஏப் 2010)
- மண் வாச(க)ம் (25 ஏப் 2010)
- ஏதேன் சீதனம் (24 ஏப் 2010)
சுகமுணர்ந்த மனநிலையில்
மெல்லக் கழற்றினேன்
முகமூடி தன்னை!
அதன்மேல் தான்
எத்தனையெத்தனை
அபிஷேகங்கள்
போலிப்பெருமையின்
பாலாபிஷேகம்
புகழ்மொழிகளின்
பன்னீராபிஷேகம்
கூடவே
இச்சையின் எச்சிலும்
இயல்பின் மிச்சமும்.
வியந்துபார்த்தன கண்கள்
நாவுக்கோ நாணம்
அதன் நர்த்தனம்
காணக்கிடைக்கலாம்
இன்னொரு முகமூடி மீது!
- இப்னு ஹம்துன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.