பனித் துளி வந்தமர்ந்த மலர்களில்
ஒன்றாகவேணும்
முகில் கூட்டம் குடி கொள்ளும்
மலையாகவேணும்
வானவில் கட்டிக்கொண்ட
நிறமாகவேணும்
வலி கொண்ட பாதைக்கு
வழியாகவேணும்
இதழ் சுவை இதமளித்த
அதரமாகவேணும்
தென்றல் காற்றில் வீசப்பட்ட
சருகாகவேணும்
நீ
நினைத்திருந்த
உன் நிழல் ஓவியங்களின்
தூரிகையாய்
நானாகாவேணும்....

- கௌசல்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It