மறந்துபோன
வீணையின்
புதிய சிணுங்கல்களாய்
இசைக்கிறது
என் ஆன்மா
பழகிவிட்ட நட்பில்
புதிய திருப்பமாய்
வந்து
வந்துபோகிறது
உன்வார்த்தைகள்.
என் நரம்புகளில்
இசைமீட்ட
தேவையில்லை
இனி எனக்கொரு
மாலைப் பொழுது.

- றஞ்சினி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It