lonely_340சுயநலத்தின் பொருட்டு
நகர்த்தப்படும் காய்களால்
சதுரங்கம் நிறைந்து
கிடக்கிறது...

கட்டங்கள் தாண்டும் பொருட்டு
நிறக்குருடாகிவிடுகின்றன‌
காய்கள்...

எம்பிக் குதிப்ப‌தும்,
பாய‌ப்ப‌துங்குவ‌தும்,
முதுகில் குத்துவ‌துமாய்
போட்டிக‌ள் நிறைகின்ற‌ன‌...

முன்ன‌றிவிப்பின்றி எல்லைக‌ள்
குறுக‌வும் மீற‌வும்
செய்கின்ற‌ன‌...

ஆடுகளத்தின் பாதைகளனைத்தும்
போகப் போக‌
கடுமையாகிக்கொண்டே இருக்கின்றன...

சுயநலம் மட்டுமே
போட்டியின்றி வெல்கிறது
இறுதிகளில்...

- ராம்ப்ரசாத், சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It