man_245யாராவது திருடிச் சென்று விடுகின்றனர்..
எனக்கும் மறைத்து வைக்கத்
தெரியவில்லை எதையும்..

காலப்போக்கில்
திருடக் கற்றுக் கொடுத்துவிட்டார்கள்
எனக்கும்..
முதன்முறை திருடிய போது
கையும் களவுமாய் மாட்டிக் கொண்டேன்..

பலரும் திருடியதை
நானே திருடியதாக சொல்லி
தண்டனை விதிக்கப்பட்டது..
என்னெதிரிலிருந்த
என்னிடம் திருடிய
யாரும் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை..

ஒரு துரோகம் கருவறையிலிருந்து
வெளியேறிக் கொண்டிருந்தது..

- இசை பிரியா ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.