உன் வீட்டு முற்றத்தில் நிற்கும்
துளசிச் செடியில்

உதிர்ந்து விழும்
ஊதுபத்தி சுருளில்

சமையலறையின் புகைபடிந்த
கறைகளில்

சிறகடிக்கும்
எதிர்வீட்டுப் புறாக்களின்
இறகுகளில்

சுவாசம் உதிரும்
ஏகாந்தமான இடத்தில்

ஒரு துடிப்பிற்கும்
மறு துடிப்பிற்குமான
இரகசிய இடைவெளியில்

அடுத்த நிகழ்விற்கும்
அடுத்த நிகழ்விற்குமான
இடைவெளியில்

மேலும் இந்த கவிதைக்குள்
நீ
இருக்கும் இடத்தில்
நான் எப்போதும்
நின்று கொண்டேயிருக்கிறேன்
அன்பே

- தங்கேஸ்

More articles by தங்கேஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.