moon_234மானஸ கங்கையில் கரையொதுங்கிய
பிரேதங்களில்
முன்பு வலது கண்ணிருந்த
துளையினுள் ஊர்ந்து சென்றது
உறுமீனொன்று
தான் பார்த்தவைகள் குறித்தான
பீதியில் விசும்பினார்கள்
பிரேதங்கள்
நதியின் முற்றத்தில்
பௌர்ணமி நாளின் பகற்பொழுதுக்காக
அழுது கொண்டிருந்தவனுக்கு
இந்தக் கவிதையை
எழுதாதவனின் சாயலிருந்தது
மல்லாந்து கிடக்கும்
ஆகாசத்தின் மீது
காறியுமிழ்ந்தது பூமி

- மதன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It