மேகம் சூழ்ந்த பொழுதில்
வானத்தில்
தொங்கு பாலம்

*
நாம் மட்டுமே இருப்பது
நல்லதல்ல
நீயும் நானும்கூட வேண்டும்

*
உளி தவற விட்ட
திருஷ்டிப் பொட்டு
காகம் கொத்தி சரி செய்கிறது

*
ஏணிக்கு
காத்திருக்கும் நேரத்தில்
வானத்தில் தாவி பார்

*
சக மனிதனை
மறுக்கும் மனதில்
இறை வாசம் எப்படி

*
காட்டாறு பருவம் கொண்டு
தோகை விட
கானக தடபுடல்

*
கவிதைகள் தொப்பை போடத்
தொடங்கி விட்டன
வாக்கிங் அனுப்பு

*
பூனையும் வீணை தான்
நாக்கால் தனை
சுத்தம் செய்கையில் கவனி

*
பிரார்த்தனையில்
பிச்சை எடுக்காதே
பேரன்பு பகிர்

*
மழைக்குப் பிறகு பார்க்கிறேன்
குளித்து சிங்காரித்த
மாமரம்

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.