மழைத் தவளைகளின்
சங்கீதமற்ற பெருநகரில்
நச்சுப்புகை சூழ்ந்திருக்கிறது
பெருவணிகங்களின் வலைகளில்
சிக்கிய நுகர்வுக் குப்பைகளால்
மேலும் குவிகிறது
தெருவெங்கும் நெகிழிக் குப்பைகள்.
செரிக்க முடியாமல்
பெருமூச்சுடன் நடுச்சாலைகளில்
படுத்துக் கொண்டு
எதையோ அசைபோடுகின்றன
நிலமிழந்த மாடுகள்.
வெடித்துச் சிதறுகிறது
புவியின் கருப்பை.

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.