மாணிக்கமோ
நஞ்சோ
வார்த்தைகளை
வெளியே உமிழாமல்
அதரம் தாண்டாது
தொண்டையிலே
அழுத்திப்
பிடித்திருத்திருக்கும்
மௌன அரவத்தின்
வீச்செல்லை முடிவிலி

வார்த்தைப் பிரசவத்தை
தள்ளிப் போடும்
மௌனங்கள் என்றும்
வலிமிகும் இடங்கள்

மனக்குகையெங்கும்
எதிரொலிக்கும்
மௌனசப்தத்தின்
டெசிபலளவு
மீயொலி

அழுத்த மௌனங்கள்
சுற்றியுள்ளோரை
மௌனமாக
இருக்க விடுவதில்லை

உறங்கும் எரிமலை
அலைமோதும் பாறை
ஆழ்கடலமைதி
சிறகடிக்கும் புள்ளினங்கால்
ஆர்ப்பரிக்கும் அரிமா
தன்னிரக்க கேவலென
எதுவும் இருக்கலாம்
மௌனத்தின் மறுபக்கத்தில்

மௌனத்தின் மறுபக்கம்
மௌனமாக என்றுமே
இருந்ததில்லை

- பா.சிவகுமார்

More articles by பா.சிவகுமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.