நுனா செடியின் நுனியில்
ஒன்றின் மேலேறி
ஒன்றாய்ப் புணர்ந்தாடும்
பச்சை வெட்டுக்கிளிகளின்
இடையில் நுழைய முடியாமல்
முகத்தை மூடிக் கொண்டது வெயில்.
சிணுங்கத் தொடங்கிற்று மேகம்
நிலம் முழுதும்
வைரத் துளிகளை உதிர்க்கிறது வானம்
துளிர்த்த மோகத் தளிர்களில்
திரண்டு நிற்கும் துளிகளுக்கு
மின்னும் உன் மூக்குத்தியின் சாயலடி

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.