பனை பூத்துக் கிடக்கும்
முதுவேனில் கோடையில்
மரங்கொத்திப் பறவையின்
டொக்டொக் ஓசையில் நிறைகிறது
சீமைக்கருவேல மரங்கள் மண்டிய
முல்லை.
எங்கிருந்தோ பறந்து வந்த
நெகிழிப்பைகளைப்
பிடித்துக் கொண்ட
புதர்ச் செடிகளில் நுழைந்த காற்று
வெளியேற முடியாமல்
சிக்கி மூச்சுத் திணறுகிறது
முகாரி ராகம் இசைத்து.
நிலமெங்கும் துருத்திக் கொண்டு
நிற்கிறது
விளைச்சலின் ஈரலில் குத்திக் கொன்ற
ரியல் எஸ்டேட் கற்கள்
நவீன நடுகல்லாய்.

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.